உண்மையான பலம் உங்களை நிரூபிக்க அல்ல - சமந்தா | ரஜினியை 'தல' ஆக மாற்றிய அமிதாப் பச்சன் | முன் ஜாமீன் பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் | என் மனைவி பற்றி அவதூறாக விமர்சிக்க வேண்டாம் ; மனோஜ் கே.ஜெயன் வேண்டுகோள் | ‛வேட்டையன்' வழக்கமான ரஜினி படம் அல்ல - ராணா | ரீ -ரிலீஸ் ஆகும் வில்லு திரைப்படம் | குபேரா படத்திற்காக குப்பை மேட்டில் தனுஷ் | நில மோசடி : நடிகை கவுதமி புகார் | சில கற்றார் பேச்சும் இனிமையே - குமரிமுத்து வீடியோவை பகிர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் பதிவு | கில்லி பார்த்துவிட்டு திரிஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ் |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கார்த்தி. தற்போது பொன்னியின் செல்வன், விருமன் படங்களில் நடித்து முடித்துள்ளார். அடுத்து சர்தார் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கார்த்தி நடிப்பில் ஏப்ரல் 2ல் வெளியான சில படங்கள் சினிமாவில் அவருக்கு முக்கிய இடத்தை தந்துள்ளது. குறிப்பாக அவரின் சூப்பர் ஹிட் படங்களான பையா, கொம்பன் மற்றும் சுல்தான் ஆகிய மூன்று படங்களும் இந்த தினத்தில் வெளியானவை.
இதுப்பற்றி கார்த்தி கூறுகையில், ‛‛பையா படம் எனக்கு புது பிம்பத்தை வெளிப்படுத்த வித்திட்டது. எட்டு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் என்னை கிராமத்து மண்ணுக்கு கொம்பன் அழைத்துச் சென்றது. சுல்தான் மீண்டும் என்னை வாண்டுகளை வசப்படுத்த வைத்தது. இவை எல்லாமே ஒரே வெளியீட்டு தேதியில் தான். இந்தப் படைப்புகளை நினைவுகளில் நிலைநிறுத்திய இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி'' என்கிறார்.