உண்மையான பலம் உங்களை நிரூபிக்க அல்ல - சமந்தா | ரஜினியை 'தல' ஆக மாற்றிய அமிதாப் பச்சன் | முன் ஜாமீன் பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் | என் மனைவி பற்றி அவதூறாக விமர்சிக்க வேண்டாம் ; மனோஜ் கே.ஜெயன் வேண்டுகோள் | ‛வேட்டையன்' வழக்கமான ரஜினி படம் அல்ல - ராணா | ரீ -ரிலீஸ் ஆகும் வில்லு திரைப்படம் | குபேரா படத்திற்காக குப்பை மேட்டில் தனுஷ் | நில மோசடி : நடிகை கவுதமி புகார் | சில கற்றார் பேச்சும் இனிமையே - குமரிமுத்து வீடியோவை பகிர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் பதிவு | கில்லி பார்த்துவிட்டு திரிஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ் |
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்க தேர்தல் வருகிற 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்தலில் கே.பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியினரும், ஆர்.கே.செல்வமணி தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிடுகிறார்கள். கொரோனா பரவலை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைதோறும் தமிழக அரசு ஊரடங்கை அமல்படுத்துவதால் தேர்தல் இரண்டு நாள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு இயக்குனர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவித்திருப்பதால் ஜனவரி 23ம் தேதி ஞாயிறு அன்று நடைபெற இருந்த இயக்குனர் சங்க தேர்தல் 25ம் தேதி செவ்வாய் கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் வெளியூர் சென்றவர்கள் ஊரடங்கு காரணமாக மறுநாள் திங்கட்கிழமை சென்னை திரும்பும்போது சிரமம் என்பதால் செவ்வாய் கிழமைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது, என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.