இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலெக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் | குஷ்புவுக்கு குழந்தை பிறக்காது என சொன்னார்கள் : மனம் திறந்த சுந்தர்.சி | கூலி டீசர் குறித்து விமர்சிக்கவில்லை : வெங்கட் பிரபு விளக்கம் | நடிப்பு குறித்து கிண்டலடித்த ரசிகைக்கு காட்டமாக பதில் அளித்த மாளவிகா மோகனன் | ஸ்ருதிஹாசன் பிரிவை உறுதி செய்த காதலன் |
தமிழ், தெலுங்கில் ஒரு காலத்தில் நம்பர் 1 நடிகையாக இருந்தவர் த்ரிஷா. கடந்த 19 வருடங்களுக்கும் மேலாக இன்னமும் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் நடித்து முடித்துள்ள 'கர்ஜனை, சதுரங்க வேட்டை 2, ராங்கி' ஆகிய படங்கள் இன்னும் வெளியாகவில்லை.
அபூர்வமாய் சமூக வலைத்தளங்கள் பக்கம் வருபவர் த்ரிஷா. தற்போது துபாயில் சுற்றுலாப் பயணத்தில் இருக்கிறார் போலிருக்கிறது- துபாயில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றின் இருப்பிடத்தைக் குறிப்பிட்டு, “என்னைப் பொறுத்தவரை வாழ்க்கை என்பது சாதாரண விஷயமல்ல. அது எப்போதுமே ஒரு அற்புதம்,” எனப் பதிவிட்டுள்ளார்.
அவரது முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி. வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்ந்து கொண்ட மகிழ்ச்சியின் வெளிப்பாடோ அது ?.