‛மணி இன் தி பேங்க்' : யுவன் வெளியிட்ட ஆல்பம் | ஏற்காட்டுக்கு ஜாலி டூர் கிளம்பிய நடிகர்கள் | மோகன்லால் இயக்கும் 'பரோஸ்' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | கேரள நர்ஸ் வீட்டிற்கு சென்று டாக்குமென்ட்ரி படம் எடுத்த ஐஸ்வர்யா ரஜினி | பக்தி பட இயக்குனர் 'ஓம்சக்தி' ஜெகதீசன் காலமானார் | லாக்டவுனில் அனுபமா பரமேஸ்வரன் | ஹிந்தி படங்களை இந்திய படமாக பார்க்க வேண்டும் : அனல் அரசு சொல்கிறார் | உண்மையான பலம் உங்களை நிரூபிக்க அல்ல - சமந்தா | ரஜினியை 'தல' ஆக மாற்றிய அமிதாப் பச்சன் | முன் ஜாமீன் பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் |
திருமணத்திற்கு பிறகும் தமிழ், தெலுங்கு, ஹிந்திபடங்கள் மற்றும் வெப்சீரிஸ்களிலும் பிசியாக நடித்து வருகிறார் பிரியாமணி. அதோடு இளவட்ட நடிகைகளுடன் போட்டி போடும் அளவுக்கு படுகவர்ச்சியாகவும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், பிரியாமணியின் கணவர் முஸ்தபா ராஜூவுக்கும் அவரது முதல் மனைவிக்கும் இடையே சட்டப்படி விவாகரத்து ஆகவில்லை என்றொரு சர்ச்சை எழுந்ததோடு, பிரியாமணியைவிட்டு அவர் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் ஒரு பரபரப்பு செய்தி வெளியானது. அதையடுத்து, முஸ்தபா ராஜூ தன்னை விட்டு பிரியவில்லை என்று சொன்ன பிரியாமணி, கண்டிப்பாக தன்னிடம் திரும்பி வருவார் என்றும் செய்தி வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் தீபாவளியையொட்டி கணவர் முஸ்தபாவுடன் இணைந்து எடுத்துள்ள போட்டோக்களை வெளியிட்டுள்ள பிரியாமணி ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறியிருக்கிறார். இதன்காரணமாக பிரியாமணி கணவரை பிரிந்து விட்டதாக வெளியான வதந்திகள் அனைத்தும் தூள் தூளாகியுள்ளது.