போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
தற்போது நடிகர் அதர்வா தள்ளிப்போகாதே, அட்ரஸ், நவரச, பட்டத்து அரசன் என பல படங்களில் நடித்து வருகிறார். இதில் ஏற்கனவே சற்குணம் இயக்கத்தில் சண்டி வீரன் என்ற படத்தில் நடித்த அதர்வா தற்போது இரண்டாவது முறையாக பட்டத்து அரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் ராஜ்கிரண், ராதிகா சரத்குமார் உட்பட்ட பல பிரபலங்களும் நடிக்கிறார்கள்.
பெண்கள் கபடியை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள எம்ஜிஎம் கடற்கரை ஓரம் அமைக்கப்பட்ட பிரமாண்ட செட்டில் நடைபெற்று வந்தது. ஆனால் நேற்று நள்ளிரவு சென்னையில் பலத்த மழை பெய்ததின் காரணமாக செட்டுக்குள் கடல் நீர் புகுந்து விட்டது. இதனால் தொடர்ந்து நடைபெற்று வந்த படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், இது படத்திற்கு தற்காலிகமாக பட்டத்து அரசன் என்று பெயர் வைத்திருந்த போதும் இது மாற்றம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.