மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் | கண்ணப்பா படப்பிடிப்பை நிறைவு செய்த அக்சய் குமார் | ஹீரோக்களுக்கு எதிராக ஹீரோக்களே வசனம் பேசும் புதிய ட்ரெண்ட் | தனது வருங்கால மனைவியை மோகன்லாலுக்கு அறிமுகப்படுத்திய காளிதாஸ் | விஜய் மகன் படத்தில் நடிக்க அழைத்தது உண்மைதான் : கவின் | திடீரென கதை சர்ச்சையை கிளப்பிய கதாசிரியருக்கு நிவின்பாலி பட தயாரிப்பாளர் கண்டனம் | வேட்டைக்காரன், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, மாவீரன் - ஞாயிறு திரைப்படங்கள் |
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன், யோகி பாபு மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த படம் 'டாக்டர்'. கொரோனா இரண்டாவது அலைக்குப் பிறகு மக்களை தியேட்டர்கள் பக்கம் அதிகம் வரவழைத்த படம் என்ற பெருமையை இந்தப் படம் பெற்றுள்ளது. படம் வெளிவந்து பத்து நாட்கள் கடந்துள்ள நிலையில் ரூ.50 கோடி வசூலைக் கடந்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
50 சதவீத இருக்கைகளில் இந்த அளவிற்கு வசூல் என்பது மிகவும் ஆச்சரியம் என மிரண்டு கிடக்கிறது தமிழ்த் திரையுலகம். கொரோனா முதல் அலைக்குப் பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்ட போது விஜய்யின் 'மாஸ்டர்' படம்தான் தியேட்டர்களைக் காப்பாற்றியது. அதற்குப் பிறகு வந்த படங்களில் 'சுல்தான், கர்ணன்' படங்கள் ஓரளவிற்கு வசூலித்தது. இப்படங்கள் நல்ல வசூலைப் பெறுவதற்கு முன்பாக கொரானோ இரண்டாவது அலை வந்ததால் தியேட்டர்கள் மூடப்பட்டது.
இந்நிலையில் இரண்டாவது அலைக்குப் பிறகு 'டாக்டர்' படம் வசூல் என்பது 'மாஸ்டர்' படத்திற்குப் பிறகு அதிக வசூல் என்றும் சொல்கிறார்கள். தீபாவளி வரை வேறு பெரிய படங்கள் போட்டிக்கு இல்லாத காரணத்தால் 'மாஸ்டர்' வசூலை நெருங்கினாலும் ஆச்சரியப்படுதவற்கில்லை என்கிறார்கள்.
'டாக்டர்' பட வெளியீட்டுச் சிக்கலில் தனது சம்பளத்தை விட்டுக் கொடுத்து படம் வெளிவர பேருதவி புரிந்த சிவகார்த்திகேயனுக்கு தயாரிப்பாளர் முழு சம்பளத்தையும் கொடுத்துவிடுவார் என்றே தெரிகிறது.