தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் |
கேரளா அருகே அரபிக் கடலில் இருக்கிறது லட்சத் தீவுகள். இங்கு பல ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள். இந்த தீவு மக்கள் மீது மத்திய அரசு பல்வேறு கெடுபிடிகளை கொண்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்து கொண்ட மலையாள நடிகையும், இயக்குனருமான ஆயிஷா சுல்தானா "மத்திய அரசு, லட்சத் தீவு மக்கள் மீது பயோ வார் நடத்துவதாகவும், கொரோனாவை பரப்புவதாகவும்" குற்றம் சாட்டினார். இதனால் இவர் மீது தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஆயிஷாவுக்கு கேரள உயர்நீதி மன்றம் முன்ஜாமீன் வழங்கி உள்ளது.
இந்த நிலையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஆயிஷா சுல்தானா, ‛‛லட்சதீவில் என்ன நடக்கிறது என்பது குறித்தும், நான் தெரிவித்த கருத்தை தொடர்ந்து எனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் வைத்தும் ஒரு சினிமா இயக்கப் போகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.