மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ்பாபு, தனது தந்தையின் பிறந்தாநாளான மே-31 அன்று வழக்கமாக தனது படங்கள் குறித்த அப்டேட்டுகளை, போஸ்டர், டீசர் போன்றவற்றை வெளியிடுவது வழக்கம். ஆனால் நேற்றைய தினம் அப்படி எந்த தகவலும் அவர் படம் குறித்து வெளியாகவில்லை. அதேசமயம் அவரது தந்தை கிருஷ்ணா, ஒரு பேட்டியில் மகேஷ்பாபு தனது கோரிக்கை ஒன்றை நிராகரித்தது குறித்து பகிர்ந்துகொண்ட புதிய தகவல் வெளியானது.
அதாவது கடந்த 70 வருடங்களுக்கு முன் என்.டி.ராமாராவ் மற்றும் ரங்காராவ் இருவரும் இணைந்து நடித்த பாதாள பைரவி என்கிற மாயாஜால படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்தப்படத்தை இந்தக்காலத்திற்கு ஏற்ற மாதிரி இந்தியில் ரீமேக் செய்து அதில் மகேஷ்பாபு நடிக்க வேண்டும் என அவரிடம் கூறினாராம் தந்தை கிருஷ்ணா.
ஆனால் மகேஷ்பாபுவோ தந்தையின் வேண்டுகோளை ஏற்க மறுத்துவிட்டாராம். ரொம்ப பழைய படம், இந்த காலத்தில் ரீமேக் செய்யும்போது, அதுவும் தனக்கு செட்டாகுமா என்கிற காரணத்தினால் அவர் மறுக்கவில்லை.. பொதுவாகவே ரீமேக் படங்களில் நடிப்பதில்லை என்பதையும் தெலுங்கு தவிர மற்ற மொழிகளில் நடிப்பதில்லை என்பதையும் மகேஷ்பாபு கொள்கையாவே வைத்திருப்பதுதான், தனது தந்தையின் கோரிக்கையை நிராகரிக்க காரணமாம்.