ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
திலீப் நடிப்பில் கடந்த வருடம் வெற்றி பெற்ற ராம்லீலா படத்தை இயக்கியவர் அருண்கோபி. இந்தப்படம் ரிலீஸாவதற்கு முன்பு தான் திலீப், நடிகை கடத்தல் வழக்கில் கைதாகி சிறை சென்றார். அவர் சிறையிலிருந்த சமயத்திலேயே இந்தப்படம் வெளியாகி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த அருண்கோபி சமீபத்தில் சினிமா பெண்கள் நல அமைப்பை சேர்ந்த நடிகைகளையும், கேரள அரசையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறியுள்ளதாவது, "யாரோ ஒரு கிரிமினலின் வாக்குமூலத்தை வைத்துக் கொண்டு ஒருவரை (திலீப்பை) கைது செய்ய அவ்வளவு ஆர்வம் காட்டிய கேரள அரசும், சினிமா பெண்கள் நல அமைப்பும் (WCC) இப்போது அமைதியாக இருப்பது ஏன்? அவளுக்காக நிற்பதற்கு இங்கு யாருக்கும் விருப்பமும் இல்லை" என விளாசியுள்ளார்.
கடந்த வருடம் கடத்தப்பட்டு பாலியல் சித்தரவதைக்கு ஆளான மலையாள நடிகைக்காக அவளுக்கொப்பம் (அவளுக்காக ) என்கிற பிரச்சாரத்தை அப்போது முன்னெடுத்த ரம்யா நம்பீசன், பார்வதி, ரீமா கல்லிங்கல் போன்ற நடிகைகள் சினிமா பெண்கள் நல அமைப்பையும் உருவாக்கினார்கள்.. அதைத்தான் கடுமையாக விமர்சித்துள்ளார் இயக்குனர் அருண்கோபி.