‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பாகுபலி-2 படத்திற்கு பிறகு இந்திய அளவில் பிரபல நடிகராகி விட்டார் பிரபாஸ். அதனால் ஹிந்தியில் இருந்தும் அவருக்கு சில பட வாய்ப்புகள் வந்தன. அதில், கரண் ஜோகரின் படமும் ஒன்று. சாஹோ படத்திற்கு பிறகு அவர் கரண் படத்தில் நடிக்கயிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது அந்த படத்தை தள்ளி வைத்து விட்டார் பிரபாஸ்.
சாஹோவிற்கு பிறகு தெலுங்கில் மீண்டும் ஒரு காதல் கதை கொண்ட படத்தில் நடிக்கிறாராம் பிரபாஸ். அந்த படத்தையும் முடித்த பிறகு தான் ஹிந்தி படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம். இதை கரண் ஜோகரிடம் தெரிவித்து விட்டாராம் பிரபாஸ். ஆக, 2020-ல் பிரபாஸ் பாலிவுட்டுக்கு செல்வார் என்று தெரிகிறது.