‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சினிமாவில் படங்களை திரையுடுவதில் முக்கிய பங்கு வகிக்கும் க்யூப் மற்றும் யு எப் ஓ உள்ளிட்ட நிறுவனங்களின் கட்டணக் கொள்ளைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் மார்ச்-1 முதல் தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது தென்னிந்திய திரையுலகங்களும் சேர்ந்து வேலைநிறுத்தத்தை துவங்க உள்ளன.
இதனால் மார்ச்-1 முதல் புதிய படங்கள் எதுவும் வெளியாக வாய்ப்பில்லை. அதேசமயம் மலையாள திரையுலகம் மட்டும் இதிலிருந்து சற்றே விலகி, மார்ச்-1ஆம் தேதி மட்டும் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறது. ஆனால் வழக்கம்போல மார்ச்-2, 9 ஆகிய தேதிகளில் ஏற்கனவே திட்டமிட்டுள்ள படங்கள் ரிலீஸாக இருக்கின்றன.
இந்த முடிவால் ஜெயராமின் மகன் காளிதாஸ் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார். மலையாளத்தில் அவர் அறிமுகமாகி நடித்துள்ள 'பூமரம்' படம் இரண்டு வருடங்களாக பல சிரமங்களை கடந்து வரும் மார்ச்-9ஆம் தேதி தான் ரிலீஸாக இருக்கிறது.
மலையாள திரையுலகம் ஒரு நாள் மட்டுமே அடையாள வேலைநிறுத்தம் செய்வதால் தனது படம் திட்டமிட்டபடி வெளியாகிவிடும் என மகிழ்ச்சியில் இருக்கிறாராம் காளிதாஸ் ஜெயராம்.