ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
நடிகை ஷிவதா நாயர், திருமணத்திற்கு பின்னும் வழக்கம்போல படங்களில் இடைவெளி விடாமல் நடித்து வருகிறார். ஷிவதா ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொள்கிறார் என்றால் அந்தப்படத்தில் நிச்சயம் அவரது கேரக்டரில் வித்தியாசம் இருக்கும் என்பதையும் தொடர்ந்து நிரூபித்து வருகிறார். அதே கண்கள் படத்தில் அவரது வில்லி அவதாரம் அதற்கு ஒரு சாம்பிள்.
அந்தவகையில் தற்போது குஞ்சாக்கோ போபனுடன் மலையாளத்தில் 'சிகாரி சாம்பு' படத்திலும் இதுவரை அவர் நடித்திராத வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ளாராம். படத்தில் அவரது தோற்றமே இந்தப்படத்தில் புதிதாக தெரிகிறது. வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையில் இந்தப்படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.