மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி ஐதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அந்த வீட்டில் அடிக்கடி பணம், வெள்ளி பொருட்கள் திருட்டு போய் வந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு 2 லட்சம் ரூபாய் திருட்டு போனது. இதுகுறித்து சிரஞ்சீவி விசாரணையில் இறங்கினார். வீட்டு வேலைக்காரர்கள் அனைவரையும் அழைத்து விசாரித்தார். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கடந்த 10 ஆண்டுகளாக வேலை செய்து வந்த கர்னூலை சேர்ந்த தெண்ணையாக என்பவர் சந்தேக வலைக்குள் வந்தார்.
அவரிடம் சிரஞ்சீவி விசாரித்ததில் அவர் உண்மையை ஒப்புக் கொள்ள மறுத்தார். இதனால் சிரஞ்சீவி அவரை போலீசிடம் ஒப்படைத்தார். அவர்கள் தங்கள் பாணியில் விசாரணை நடத்தியதில் திருடியதை ஒப்புக் கொண்டார் தெண்ணையா. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 16 லட்சம் வரை திருடியிருப்பதையும், திருட்டு பணத்தை கொண்டு பிளாட் வாங்கியிருப்பதும் தெரிய வந்தது. போலீசார் தெண்ணையா மீது வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.