ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தெலுங்கு திரை உலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி தனது 149வது படத்திற்கு பின்னர் அரசியல் பிரவேசம் மேற்கொண்டார். தற்போது அரசியல் ஓய்வு எடுத்துள்ள சிரஞ்சீவி ஒன்பது வருட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். சிரஞ்சீவியின் 150வது திரைப்படமான கைதி நம்பர் 150 படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி குண்டூரில் நடைபெற்றது. மெகா குடும்ப உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் டோலிவுட் பிரபலங்களுடன் ஆயிரக்கணக்கான ரசிகர்களும் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய சிரஞ்சீவி நிகழ்ச்சியின் போது வெளியிடப்பட்ட கைதி நம்பர் 150 பட டிரைலரில் இடம்பெற்ற வசனங்களைப் பேசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். மேலும் ரசிகர்களின் இத்தகைய கரகோஷங்களை கேட்க ஒன்பது வருடங்களாக காத்திருந்ததாக நெகிழ்ச்சியுடன் கூறினார். ரசிகர்களின் கைத்தட்டல்களே எதையும் சாதிக்கும் துணிச்சலை கலைஞர்களிடம் உருவாக்குகின்றது என கூறிய சிரஞ்சீவி, கைதி நம்பர் 150 படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களும் சக நடிகர்களும் சிறப்பாக பணியாற்றியதாக பாராட்டினார்.
இயக்குனர் விவி விநாயக் இயக்கத்தில் சிரஞ்சீவி மகனும் நடிகருமான ராம் சரண் தயாரித்துள்ள இப்படம், தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்காகும். சிரஞ்சீவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ள இப்படத்தின் பாடல்கள் தேவிஸ்ரீ பிரசாத் இசையில் ஏற்கனவே வெளிவந்து வெற்றி அடைந்துள்ளன. பொங்கலை முன்னிட்டு இப்படம் எதிர்வரும் ஜனவரி 11ல் வெளிவரவுள்ளது.