‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
கடந்த மே மாதம் கேரளாவில் பெரும்பாவூர் பகுதியை செந்த சட்டக்கல்லூரி மாணவியான ஜிஷா என்பவர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். நாடெங்கும் அதிர்ச்சியலையை இந்த சம்பவம் ஏற்படுத்தியது.. ஜிஷா குடியிருந்த வீடு பாதுகாப்பற்ற சாதாரண வீடாக இருந்ததும் கூட, ஜிஷாவிற்கு தன்னை காப்பற்றிக்கொள்ள முடியாமல் போக காரணமாக அமைந்தது.. அதனால் ஜிஷாவின் தயார் அவருக்கு சொந்தமான இடத்தில் ஒரு நல்ல வீடு கட்டிக்கொள்வதற்காக தான் நடித்த ஆடுபுலியாட்டம்' படத்தின் லாபத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை அப்போது வழங்கினார் ஜெயராம்.
ஆனால் மலையாள திரையுலகின் ஜனப்ரிய நாயகனின் யோசனையோ வேறுமாதிரி இருந்தது.. கையில் நிலமிருந்தும் குடியிருக்க வீடில்லாமல் ஆதரவற்ற சூழலில் வசிக்கும் அன்றாடங்காய்ச்சி மக்களில் இருந்து இன்னொரு ஜிஷாவுக்கு இந்த கதி ஏற்பட்டு விடக்கூடாது என முடிவு செய்தவர், நன்கு யோசித்து தீர்க்கமான முடிவுக்கு வந்தார்.. அதுதான் அடிமட்டத்தில் வாழ்வாதாரத்திற்கே சிரமப்படும் 1000 பேருக்கு இலவசமாக வீடுகள் கட்டித்தர முடிவு செய்தார்..
இதற்கான அடிக்கல் நாட்டுவிழா இரண்டு தினங்களுக்கு முன் நடைபெற்றது.. இதில் முதல் கட்டமாக மாவேலிக்கரை பகுதியில் ஆறு வீடுகள் கட்டப்பட இருக்கின்றன.. படிப்படியாக அடுத்தடுத்து ஒவ்வொரு கட்டமாக மற்ற வீடுகளும் கட்டைத்தரப்ப்படுமாம். இதற்கான நிதியை திலீப் நடத்தி வரும் தொண்டு நிறுவனம் மற்றும் இன்னும் சில என்.ஆர்.ஐ அமைப்புகள் ஏற்றுக்கொண்டுள்ளன. தங்களது பெயரில் இரண்டு சென்ட் நிலமாவது வைத்திருக்கும் பாமர ஜனங்களில், அதேசமயம் கணவனை இழந்து குடும்பத்தை நடத்த சிரமப்படும் விதவை தாய்மார்களுக்கு இந்த திட்டத்தில் முன்னுரிமை தரப்படுமாம்.