‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
இன்றைய வாட்ஸ் அப் யுகத்தில் சர்ச்சைக்குரிய புகைப்படமோ அல்லது வீடியோவோ எது கிடைத்தாலும் அதை வாட்ஸ் அப்பில் ஷேர் செய்துவிடுகிறார்கள். யார் ஷேர் செய்தது, அதன் உண்மைத்தன்மை என்ன என்பதை பற்றியெல்லாம் அவர்கள் கவலைப்படுவதில்லை. இந்த வாட்ஸ் அப்பில் சில அராஜக காவலர்களின் உண்மை முகம் வெளிப்பட்டு வருவது போன்ற ஒரு சில நல்ல நிகழ்வுகள் நடந்தாலும் கூட, பெரும்பாலும் சினிமா பிரபலங்களை சந்திக்கு கொண்டு வருவதுதான் இதன் முக்கிய வேலையாக இருக்கிறது என்று கூட சொல்லலாம்.
அப்படி என்ன ஏதென்று ஆராயாமல் வெளியானதுதான் சமீபத்தில் வாட்ஸ் அப்பில் வலம் வரும் மலையாள நடிகை பாமாவின் புகைப்படம். பாமா, தாமிரபரணி பானு, மற்றும் இன்னொரு பெண் மூவரும் மத்திம வயது ஆண் ஒருவர் மீது கட்டியணைத்தவாறு சாய்ந்திருக்கும் அந்தப்புகைப்படத்தை வழக்கம்போல குதர்க்கமான கண்ணோட்டத்துடன் பலரும் வாட்ஸ் அப்பில் ஷேர் செய்ய ஆரம்பித்தார்கள்.. இந்த விஷயம் பாமாவின் காதுகளுக்கும் போனது. அந்நாள் ஆச்சர்யம் என்னவென்றால் அந்த போட்டோ தன்னுடையது அல்ல என அவர் மறுக்கவில்லை. மாறாக, அதன் உண்மைத்தன்மையை விளக்கியுள்ளார்.
“அந்த போட்டோவில் இருப்பவர் எங்களது அன்புத்தோழியான பின்னணி பாடகி ரஞ்சனி ஜோஸின் தந்தையான ஜோஸ் அங்கிள். எங்களையும் தங்கள் மகள்கள் போல அன்பாக பார்த்துக்கொள்ளும் அவர் எங்களது தந்தைக்கு நிகரானவர். தயவு செய்து பார்வேர்டு பட்டனை அழுத்தும் முன் ஒரு நிமிடம் யோசியுங்கள்” என வாட்ஸ் அப்பில் வக்கிரம் பரப்புபவர்களுக்கு சாட்டையடி கொடுத்துள்ளார் பாமா. கூடவே ரஞ்சனி தனது தந்தையுடன் தனிப்பட்ட முறையில் எடுத்துள்ள புகைப்படங்களையும் தனது முகநூளில் வெளியிட்டுள்ளார் பாமா.