சுந்தர்.சிக்கு முதல் ரூ.100 கோடி படமாக அமைந்த அரண்மனை 4 | அஜித்தை அடுத்தடுத்து இயக்க போகும் சிவா - மோகன் ராஜா | ‛இந்தியன் 2' முதல் பாடல் வெளியானது : ஜூன் 1ல் இசை வெளியீடு | சிம்பு 48வது படத்தில் இரண்டு பாலிவுட் ஹீரோயின்கள் | அதிரடி ஆக்ஷனுக்கு தயாராகும் சமந்தா | தக் லைப் கதையில் மணிரத்னம் செய்த அதிரடி மாற்றம் | அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய விஜய் | கவின், நயன்தாரா இணையும் புதிய படம் | வெளிநாடுகளில் ரிலீஸ் ஆகும் மாஸ்டர் | சென்னையில் 3.5 கோடிக்கு 'போர்ஷே' கார் வாங்கிய நாக சைதன்யா |
தமிழில் அஜித் நடித்த வேதாளம் படத்தில் வில்லன்களில் ஒருவராக அறிமுகமானவர் நடிகர் கபீர் துஹான் சிங். அந்த படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதியின் றெக்க மற்றும் விஷாலின் ஆக்சன் ஆகிய படங்களில் வில்லனாக நடித்தார். அதேசமயம் அதிக அளவிலான தெலுங்கு படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி பிஸியாக நடித்து வருகிறார். சினிமாவில் நுழைந்த இந்த எட்டு ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நடித்துவிட்ட கபீர் துஹான் சிங் தற்போது முதன்முறையாக மலையாளத்திலும் அடியெடுத்து வைத்துள்ளார்.
நடிகர் டொவினோ தாமஸ் மூன்று வேடங்களில் தற்போது நடித்து வரும் வரலாற்று படமான அஜயன்டே ரெண்டாம் மோஷனம் என்கிற படத்தில் வில்லனாக நடிக்கிறார் கபீர் துஹான் சிங்.. மூன்று விதமான காலகட்டங்களில் நடக்கும் இந்த படத்தில் இவரும் இரண்டு வித காலகட்டங்களில் இரண்டு கெட்டப்புகளில் நடித்துள்ளாராம்.
மேலும் இந்தப்படத்தில் டொவினோ தாஸுடன் வாள் சண்டை காட்சிகளிலும் முதன்முறையாக நடித்தது புதுமையான அனுபவமாக இருந்தது என கூறியுள்ளா கபீர் துஹான் சிங். மலையாள திரையுலகில் நுழைவதற்கான சரியான நேரம் பார்த்துக் கொண்டிருந்தபோது தனது நடிப்புக்கு தீனி போடும் விதமாக இந்த படமும் கதாபாத்திரமும் அமைந்ததில் இரட்டிப்பு சந்தோஷம் என்றும் கூறியுள்ளார்.