விடாமுயற்சி படத்தின் முதல் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகிறது | குழந்தையின் தாய் தற்கொலை : மனிதநேயம் இறந்து கொண்டிருப்பதாக நடிகை கல்யாணி ஆதங்கம் | 'ராமாயணா' - படப்பிடிப்பு நிறுத்தி வைப்பு ? | உங்கள் எதிர்பார்ப்பே என் எதிர்பார்ப்பு தனுஷூடன் அந்தோனி தாசன் | 5 மொழிகளில் ரீமேக் ஆகும் பார்கிங் திரைப்படம் | டிரான்சில்வேனியா திரைப்பட விழாவில் கொட்டுக்காளி | மம்முட்டியின் பிரம்மயுகத்தை தனியாக பார்க்க மாட்டேன் : ஷோபிதா துலிபாலா | பவன் கல்யாண் படத்தில் தபுவுக்கு பதிலாக ஸ்ரேயா ரெட்டி | டர்போ படத்தின் கதையே கதாநாயகி மீது தான் நகரும் : மம்முட்டி உறுதி | பஹத் பாசிலின் ஆவேசத்தை விழிப்புணர்வுக்கு பயன்படுத்திய மும்பை போலீஸ் |
மம்முட்டி நடிப்பில் சில வாரங்களுக்கு முன்பு வெளியான நண்பகல் நேரத்து மயக்கம் படம் விமர்சனம் ரீதியாக பாராட்டப்பட்டது. இந்த நிலையில் அவர் நடித்துள்ள அதிரடி ஆக்சன் படமான கிறிஸ்டோபர் என்கிற படம் தற்போது வெளியாகி உள்ளது. இதில் கதாநாயகிகளாக சினேகா, ஐஸ்வர்ய லட்சுமி, அமலா பால் நடித்துள்ளனர். பிரபல இயக்குனர் பி.உன்னிகிருஷ்ணன் இயக்கியுள்ளார்.
இந்த நிலையில் சமீபத்திய புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் மம்முட்டியும் நாயகிகளில் ஒருவரான ஐஸ்வர்ய லட்சுமியும் இணைந்து பங்கேற்றனர். அப்போது ஐஸ்வர்ய லட்சுமியிடம் மம்முட்டி பற்றி கேட்கப்பட்டபோது, அவர் சர்க்கரை போன்றவர் என்று புகழ்ந்து கூறினார் ஐஸ்வர்யா லட்சுமி. உடனே மம்முட்டி அவரை கிண்டலடிக்கும் விதமாக சர்க்கரை என்று சொல்ல வேண்டாம் பஞ்சசாரம் (சீனி) என்று வேண்டுமானால் சொல்லுங்கள் என்றார்.
மேலும் சர்க்கரை என்றால் கருத்த நிறத்தில் உள்ள கருப்பட்டியை தான் குறிக்கிறது. இதே நான் உங்களைப் பற்றி சொல்லும்போது சர்க்கரை என்று சொன்னால் நன்றாக இருக்குமா என்று கேட்க, இதற்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் தர்ம சங்கடத்தில் ஆழ்ந்தார் ஐஸ்வர்ய லட்சுமி.
தற்போது இதுகுறித்த வீடியோ கிளிப் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் பலரும் இன்னமும் கூட்ட மம்முட்டி நிற பேதம் பார்க்கிறாரா என்று கூறி அவரது பேச்சுக்களுக்கு தங்களது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.