பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் |
மம்முட்டி நடிப்பில் சமீபத்தில் வெளியான நண்பகல் நேரத்து மயக்கம் படம் விமர்சன ரீதியாக அவருக்கு பாராட்டுக்களை பெற்று தந்துள்ளது. இதைத்தொடர்ந்து மலையாளத்தில் கிறிஸ்டோபர், தெலுங்கில் ஏஜென்ட் என அவரது அடுத்தடுத்த படங்கள் என்கிற ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளன. இன்னொரு பக்கம் ஜோதிகாவுடன் இணைந்து நடித்து வரும் காதல் ; தி கோர் படம் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. தற்போது சில நாட்களுக்கு படப்பிடிப்பு எதுவும் இல்லாத நிலையில் சற்று ரிலாக்ஸ் ஆன மம்முட்டி, எர்ணாகுளத்தில் உள்ள தான் படித்த சட்டக்கல்லூரிக்கு விடுமுறை தினத்தன்று ஒரு விசிட் அடித்துள்ளார்.
கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கு முன்பு அவர் படித்த அந்த கல்லூரியில் தன்னுடைய வகுப்பறைக்கு சென்று அமர்ந்து தன்னுடைய பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார் மம்முட்டி. “நாங்கள் படிக்கும் காலத்தில் இங்கே தான் எங்கள் ஆட்டமும் பாட்டமும் நடக்கும்.. அதே சமயம் இது ஒரு பழைய சட்டசபை போலவும் நீதிமன்றம் போலவும் கூட இருந்தது” என்று தனது மலரும் நினைவுகளை ஒரு வீடியோவாகவும் வெளியிட்டுள்ளார் மம்முட்டி. அவரது ரசிகர்களிடையே இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது..