ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
மலையாள திரையுலகில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக முன்னணி நட்சத்திரங்களாக வலம் வருபவர்கள் மோகன்லால், மம்முட்டி, சுரேஷ்கோபி மூவரும். இதில் சுரேஷ்கோபி இடையில் அரசியலில் நுழைந்து, நடிப்பை விட்டு ஒதுங்கினாலும் தற்போது மீண்டும் பழையபடி சுறுசுறுப்பாக தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இதற்கு முன்னதாக பல நிகழ்வுகளில் இவர்கள் மூவரும் ஒன்றாக கலந்து கொண்டாலும் கொரோனா தாக்கத்திற்கு பிறகான இந்த இரண்டு வருடங்களில் தற்போது தான் மீண்டும் முதன்முறையாக ஒன்று கூடியுள்ளனர்.
நேற்று முன்தினம் சுரேஷ்கோபியின் பிறந்தநாள் என்பதுடன் மலையாள நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றதாலும் இந்த அதிசய சந்திப்பு நிகழ்ந்துள்ளது.. பொதுக்குழு கூட்டத்திலேயே சுரேஷ்கோபியின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். மோகன்லாலும் மம்முட்டியும் இதுகுறித்த வீடியோக்களையும் புகைப்படங்களையும் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் சுரேஷ்கோபி. இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகின்றன.