உண்மையான பலம் உங்களை நிரூபிக்க அல்ல - சமந்தா | ரஜினியை 'தல' ஆக மாற்றிய அமிதாப் பச்சன் | முன் ஜாமீன் பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் | என் மனைவி பற்றி அவதூறாக விமர்சிக்க வேண்டாம் ; மனோஜ் கே.ஜெயன் வேண்டுகோள் | ‛வேட்டையன்' வழக்கமான ரஜினி படம் அல்ல - ராணா | ரீ -ரிலீஸ் ஆகும் வில்லு திரைப்படம் | குபேரா படத்திற்காக குப்பை மேட்டில் தனுஷ் | நில மோசடி : நடிகை கவுதமி புகார் | சில கற்றார் பேச்சும் இனிமையே - குமரிமுத்து வீடியோவை பகிர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் பதிவு | கில்லி பார்த்துவிட்டு திரிஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ் |
ஓவர் நைட் பாப்புலர் என்பார்களே அது மாதிரி அர்ஜூன் ரெட்டி என்ற ஒரே படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு வந்தவர் ஷாலினி பாண்டே. தன்பிறகு மேரி நிம்மோ என்ற இந்தி படத்தில் நடித்தார்.
அடுத்த படமே பாலிவுட்டா என்ற எல்லோரும் ஆச்சர்யப்பட்டார்கள். ஆனால் அந்த படம் வெற்றி பெறாதது ஷாலினிக்கு பின்னடைவை தந்தது. தமிழில் 100 பிரசண்ட் காதல் படத்தில் நடித்தார். அதுவும் கைகொடுக்கவில்லை. மேலும் சில படங்களில் நடித்தார்.
இப்போது மீண்டும் பாலிவுட்டுக்கு திரும்பி இருக்கிறார். ஏற்கெனவே ஜெயேஷ்பதி ஜோர்தார் படத்தில் நடித்து முடித்துள்ள அவர் தற்போது ஆமீர்கானின மகன் ஜுனைத் கான் அறிமுகமாகும் மகாராஜா படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
இந்த படத்தை யஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கிறது. சித்தார்த் மல்ஹோத்ரா இயக்குகிறார். 1982ம் ஆண்டு நடந்த பிரிஜ்நாத்ஜி மகராஜ் வழக்கை மையமாக கொண்டு இந்த படம் தயாராகிறது. இதில் ஜுனைத் கான் பத்திரிகையாளராக நடிக்கிறார்.
மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வும், அவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் முடிந்திருக்கிறது. ஊரடங்கு முடிவுக்கு வந்ததும் படப்பிடிப்புகள் நடக்க இருக்கிறது.