மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
கமல்ஹாசன் நடிப்பில் தமிழில் வெளிவந்த அவ்வை சண்முகி படத்தின் இந்தி ரீமேக்கான சாச்சி 420 படத்தில் கமல்ஹாசனின் மகளாக சிறு குழந்தையாக நடித்தவர் பாத்திமா சனா ஷேக். சமீபத்தில் ஆமீர் கானின் தங்கல் படத்தில் கீதா போகாத்தாக நடித்து பிரபலமானார்.
இந்நிலையில் சமீபத்தில் அவர் மர்ம நபர் ஒருவரால் தாக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நான் ஜிம்மில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்தபோது ஒரு ஆண் என்னையே பார்த்ததை கவனித்தேன். எதற்காக இப்படி பார்க்கிறாய் என்று கேட்டேன். அந்த நபரோ, அது என் இஷ்டம் என்றார்.
அறை வேணுமா என்று நான் கேட்டதற்கு அறையேன் என்றார். உடனே நான் அவரை அறைந்தேன், பதிலுக்கு அவர் என்னை குத்திவிட்டார். இதையடுத்து எனக்கு மயக்கம் வந்துவிட்டது. மயக்கம் தெளிந்த உடன் என் அப்பாவை அழைத்து நடந்ததை கூறினேன். அவர் மூன்று நபர்களை அழைத்துக் கொண்டு வந்தார். என்னை தாக்கியவர் ஓடத் துவங்கினார். அப்பாவும் நண்பர்களும் அவரை துரத்தினார்கள். ஆனால் அந்த ஆள் தப்பி விட்டான். தொடர்ந்து நம் நாட்டில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே இருக்கிறது. என்றார்.