மோசடி வழக்கில் நயன்தாரா பட இயக்குனர் கைது | வித்தியாசமான ஹேர்ஸ்டைலுக்கு மாறிய கீர்த்தி சுரேஷ் | ரிலீஸ் செய்ய மறுத்த ஆத்திரத்தில் பேஸ்புக்கில் படத்தை வெளியிட்ட டொவினோ தாமஸ் பட இயக்குனர் | கார் விபத்தில் சிக்கிய லியோ நடிகரின் குடும்பம் ; உறவினர் ஒருவர் பலி | இயக்குனரின் கணவர் பேட்டியால் சிக்கலில் மம்முட்டி | அன்று… இன்று… புகைப்படங்களைப் பகிர்ந்து நன்றி சொன்ன விஜய் கனிஷ்கா | மகாபலிபுரத்தில் முடிந்த 'மேக்ஸ்' படப்பிடிப்பு | 'டாக்சிக்' படத்தின் கதாநாயகி கியாரா அத்வானி | 'வடக்கன்' தலைப்புக்கு சென்சார் எதிர்ப்பு | இயக்குனர் விக்ரமனின் மகனை வாழ்த்திய விஜய், ரஜினி |
ஜெயலலிதாவின் பயோபிக் படமான தலைவி படத்தில் அவரது கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவிற்கு வந்துள்ளவர் ஹிந்தி நடிகை கங்கனா ரணவத்.
பாலிவுட்டில் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கும் கங்கனா திரையுலகத்திற்கு வந்து இன்றுடன் 15 வருடங்கள் ஆகிறது. தன்னுடைய திரையுலகப் பயணத்தை ஷாரூக்கானுடன் ஒப்பிட்டு அவர் இன்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
“15 வருடங்களுக்கு முன்பு, இன்று தான் கேங்ஸ்டர் படம் வெளியானது. ஷாரூக்கான் ஜி மற்றும் நான் ஆகிய இருவருடைய கதைகள் தான் மிகப் பெரும் வெற்றிக் கதைகள். ஆனால், ஷாரூக்கான டில்லியிலிருந்து வந்தவர், கான்வென்ட்டில் படித்தவர், அவருடைய பெற்றோர் சினிமாவில் இருந்தனர்.
எனக்கு ஒரு வார்த்தை கூட ஆங்கிலம் தெரியாது, படிப்பு கிடையாது, ஹிமாச்சல் பிரதேசத்தின் ஒரு தொலைதூர கிராமத்திலிருந்து வந்தவள். என் வாழ்வை பரிதாபமாக்கிய, என்னுடைய அப்பா, தாத்தா ஆகியோரிடம் சண்டையிட்டு ஒவ்வொரு அடியாக போராடித்தான் வந்தேன். 15 ஆண்டுகளுக்குப் பிறகு, இவ்வளவு வெற்றிக்குப் பின்னும், வாழ்வதற்கு ஒவ்வொரு நாளும் போராடித்தான் வருகிறேன், ஆனால் முற்றிலும் மதிப்பானவை அவை. ஒவ்வொருவருக்கும் நன்றி,” என தன்னுடைய 15 வருட திரையுலக அனுபவம் குறித்து குறிப்பிட்டுள்ளார்.