‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பிரபல மலையாள நடிகை மைதிலி. 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சில படங்களில் கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார். பல படங்களில் பாடியுள்ளார். சால்ட் அண்ட் பெப்பர், மற்றும் ஈ அடுத்த கலத்து ஆகிய படங்களில் நடித்ததற்காகக பல விருதுகளையும் பெற்றிருக்கிறார். மைதிலி சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சினிமா தயாரிப்பு நிர்வாகியான கிரண் குமார் என்பவரை காதலித்து வந்தார். பின்னர்தான் அவருக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்ட விபரம் தெரிந்தது. இதனால் மைதிலி கிரண் குமாரை பிரிந்து விட்டார்.
இதனை கிரண்குமாரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மைதிலியை பலவாறு டார்ச்சர் செய்து வந்திருக்கிறார். நீயும் நானும் நெருக்கமாக இருக்கும் படங்களை வெளியிடுவேன் என்று மிரட்டியும் வந்துள்ளார். ஆனால் இதனை மைதிலி பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்த நிலையில் கிரண்குமார் மைதிலியுடன் நெருக்கமாக இருக்கும் படங்களை தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மைதிலி, கிரண்குமார் மீது எர்ணாகுளம் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் கிரண்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.