புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |
கொரோனா பிரச்சினையில் இருந்து உலகம் இன்னமும் மீண்ட பாடில்லை. கொரோனா தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருவதால், இப்பிரச்சினை எப்போது தீரும் என்றும் தெரியவில்லை. இதனால் மற்ற துறைகளைப் போலவே திரைத் துறையும் பாதிக்கப்பட்டிருப்பது அனைவரும் அறிந்தது தான்.
அதிலும் குறிப்பாக பெரிய பெரிய நடிகர்களின் படங்கள் தான் அதிக பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறதாம். கொரோனா பயத்தால் பலர் படப்பிடிப்புக்கு வரத் தயக்கம் காட்டி வருகிறார்கள். சமீபத்தில் பிரதர் படத்தின் படப்பிடிப்பு கொரோனா பிரச்சினையால் நிறுத்தப்பட்டது. மீண்டும் எப்போது படப்பிடிப்பு தொடங்கும் என்பது தெரியவில்லை.
இந்த சூழ்நிலையில் பிரமாண்ட படமொன்றில் நடித்து வரும் நாயகனும் இப்போதைக்கு படப்பிடிப்பிற்கு வரமுடியாது எனத் தெரிவித்து விட்டாராம். ஏற்கனவே மற்றொரு களத்தில் பரபரப்பாக இயங்கி வரும் அவர், தேவையில்லாமல் படப்பிடிப்புகளுக்குச் சென்று உடல்நிலையைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம் என முன்னெச்சரிக்கையாக இப்படி முடிவெடுத்து விட்டார் போலும்.
ஆனால் இயக்குநர் அப்படியில்லை. இந்தப் படத்தால் வேறு படங்களில் ஒப்பந்தமாக முடியாமல் தவித்து வந்தார். அதனால்தான் நாயகன் இல்லாமல் உடனடியாக படப்பிடிப்பைத் தொடங்க தயாரிப்பு முடிவு செய்து விட்டதாம்.