அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கும் சோஷியல் மீடியா பிரபலம் | ராதிகாவுக்கு காலில் என்னாச்சு : நேரில் நலம் விசாரித்த சிவகுமார் | அல்லு அர்ஜுன் - சிரஞ்சீவி குடும்பத்தினர் மோதல் ? | நில சர்ச்சை விவகாரம் : ஜூனியர் என்.டி.ஆர் விளக்கம் | மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா |
மற்றொரு நடிகையைப் பார்த்து பிரபல நடிகை எடுத்த முடிவு புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதையாகி விட்டது. பொதுவாகவே திருமணமாகி விட்டால் நடிகைகளுக்கு மார்க்கெட் போய் விடும். ஆனால் தமிழ் மற்றும் தெலுங்கிலும் திருமணத்திற்குப் பிறகு பிஸியாக நடித்து வருகிறார் திருமணமான நடிகை. இவரைப் பார்த்து பிரபல நடிகை ஒருவர் தானும் இதே போல் திருமணத்திற்குப் பிறகும் நடிக்கலாம் என ஆசைப்பட்டார். ஆனால் திருமணத்திற்குப் பிறகு நடிகைக்கு பட வாய்ப்புகள் குறைந்திருக்கிறதாம். ஏற்கனவே கைவசம் உள்ள படங்களை முடித்துக் கொடுத்தால், புதுப்படம் எதுவும் இல்லையாம். நடிகைக்கு படவாய்ப்புகள் குறைந்ததற்கு திருமணம் மட்டுமல்ல, அவர் அதிகமாகக் கேட்கும் சம்பளமும் தான் காரணம் என்கிறார்கள் திரைவட்டத்தில்.