‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ரசிகர் மன்றம் என்றால் ஆண்கள் மட்டும் தான் நடத்த வேண்டுமா..? பெண்களுக்கு அந்த உரிமைகூட இல்லையா..? இருக்கு என நிரூபித்து காட்டியுள்ளார்கள் கேரள மாநில இளம்பெண்கள்.. அதிலும் முதன்முதலாக ஒரு மலையாள நடிகருக்கு பெண்கள் ரசிகை மன்றம் ஆரம்பித்திருக்கிறார்கள் என்றால் அந்த பாக்கியசாலி நடிகர் துல்கர் சல்மான் தான். என்ன ஒன்று ஆண் ரசிகர்களைபோல கட் அவுட் வைப்பது, பாலபிஷேகம் பண்ணுவது, பட்டாசு கொளுத்தி, பேப்பர்களை கிழிப்பது இவற்றை மட்டும் தான் இவர்கள் பண்ணவில்லை..
இந்த தைரியசாலி பெண்கள் அனைவரும் கேரள மாநிலம் மூவாட்டுப்புழாவில் உள்ள பெருமட்டம் பகுதியை சேர்ந்தவர்கள். ஆரம்பத்தில் 'DQ GIRLS' என்கிற வாட்ஸ் அப் குரூப் ஒன்றை ஆரம்பித்த இவர்கள், இப்போது அதை துல்கர் ரசிகர் மற்றும் நற்பணி மன்றம் ஆக மாற்றிவிட்டார்கள். சமீபத்தில் மூவாட்டுப்புழாவில் வெளியான துல்கரின் 'கழி' படத்திற்கு தங்களது மன்றம் சார்பில் பிளக்ஸ் பேனர் ஒன்றை வைத்து அசத்திவிட்டனர் இந்த ரசிகைகள்.