தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் |

சீரியல் நடிகைகள் பலரும் கருவுற்றது முதல் குழந்தை பிறப்பது வரை போட்டோஷூட்களை நடத்தி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து அலப்பறைகள் செய்து கொண்டிருக்க எந்தவித அலட்டலும் இல்லாமல் அரசு மருத்துவமனையில் தன் குழந்தையை பெற்றெடுத்துள்ளார் நடிகை ரேவதி.
இயக்குனர் திருமுருகன் எளிய மனிதர்களின் வாழ்வை தன் கதையில் படமாக்குவதை போலவே அதில் நடிப்பவர்களையும் எதார்த்த மனிதர்களாகவே தேர்ந்தெடுப்பார். அந்த வகையில் நாதஸ்வரம், கல்யாண வீடு சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரேவதி. வெள்ளித்திரையிலும் சுந்தரபாண்டியன் உள்ளிட்ட சில படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். திருமணம் முடிந்த பின் நடிப்பதற்கு டாட்டா சொல்லிவிட்டு குடும்ப வாழ்க்கையை கவனித்து வந்தார். ரேவதிக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், இரண்டாவதாக கருவுற்றிருந்தார். இந்நிலையில் நேற்று அவருக்கு பரமக்குடி அரசு மருத்துவமனையில் வைத்து இரண்டாவது ஆண் குழந்தை பிறந்துள்ளது.