‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

சீரியல் நடிகைகள் பலரும் கருவுற்றது முதல் குழந்தை பிறப்பது வரை போட்டோஷூட்களை நடத்தி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து அலப்பறைகள் செய்து கொண்டிருக்க எந்தவித அலட்டலும் இல்லாமல் அரசு மருத்துவமனையில் தன் குழந்தையை பெற்றெடுத்துள்ளார் நடிகை ரேவதி.
இயக்குனர் திருமுருகன் எளிய மனிதர்களின் வாழ்வை தன் கதையில் படமாக்குவதை போலவே அதில் நடிப்பவர்களையும் எதார்த்த மனிதர்களாகவே தேர்ந்தெடுப்பார். அந்த வகையில் நாதஸ்வரம், கல்யாண வீடு சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரேவதி. வெள்ளித்திரையிலும் சுந்தரபாண்டியன் உள்ளிட்ட சில படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். திருமணம் முடிந்த பின் நடிப்பதற்கு டாட்டா சொல்லிவிட்டு குடும்ப வாழ்க்கையை கவனித்து வந்தார். ரேவதிக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், இரண்டாவதாக கருவுற்றிருந்தார். இந்நிலையில் நேற்று அவருக்கு பரமக்குடி அரசு மருத்துவமனையில் வைத்து இரண்டாவது ஆண் குழந்தை பிறந்துள்ளது.




