இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சீரியல் நடிகைகள் பலரும் கருவுற்றது முதல் குழந்தை பிறப்பது வரை போட்டோஷூட்களை நடத்தி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து அலப்பறைகள் செய்து கொண்டிருக்க எந்தவித அலட்டலும் இல்லாமல் அரசு மருத்துவமனையில் தன் குழந்தையை பெற்றெடுத்துள்ளார் நடிகை ரேவதி.
இயக்குனர் திருமுருகன் எளிய மனிதர்களின் வாழ்வை தன் கதையில் படமாக்குவதை போலவே அதில் நடிப்பவர்களையும் எதார்த்த மனிதர்களாகவே தேர்ந்தெடுப்பார். அந்த வகையில் நாதஸ்வரம், கல்யாண வீடு சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரேவதி. வெள்ளித்திரையிலும் சுந்தரபாண்டியன் உள்ளிட்ட சில படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். திருமணம் முடிந்த பின் நடிப்பதற்கு டாட்டா சொல்லிவிட்டு குடும்ப வாழ்க்கையை கவனித்து வந்தார். ரேவதிக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், இரண்டாவதாக கருவுற்றிருந்தார். இந்நிலையில் நேற்று அவருக்கு பரமக்குடி அரசு மருத்துவமனையில் வைத்து இரண்டாவது ஆண் குழந்தை பிறந்துள்ளது.