'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் |

சமீப காலங்களில் தொலைக்காட்சி தொடர்களில் காதல் கதைகள் தனிப் பெரும் இடத்தை பிடித்து வருவது போல் அதில் நடிக்கும் நாயகன், நாயகியும் அவர்களுக்கு இடையே நடக்கும் ரொமான்ஸும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் புதிய ஜோடியுடன் சுவாரசியமான காதல் கதையோடு விஜய் டிவியில் ஒரு புதிய தொடர் வெளிவந்துள்ளது.
விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரிப்பில், எஸ்.குமரன் இயக்கும் புதிய மெகா தொடர் "தமிழும் சரஸ்வதியும்". நாயகன், நாயகி இருவருக்குமே படிப்பில் பிரச்னை. தான் சரியாக படிக்காததால் தன் மனைவியாவது நன்றாக படித்திருக்க வேண்டும் என நினைக்கிறார் நாயகன். ஆனால், படிப்பில் திணறும் நாயகிக்கும் நாயகனுக்கும் எப்படி காதல் உருவ போகிறது என்பது தான் கதையின் மையக்கரு.
சரவணன் - மீனாட்சி தொடங்கி ஆதி - பார்வதி வரை இன்றைய தலைமுறையினர் தொலைக்காட்சி தொடர்களில் வரும் காதல் ஜோடிகளை கொண்டாடி பிரபலமாக்கி வருகின்றனர். அந்த வகையில் ஏற்கனவே தொலைக்காட்சி தொகுப்பாளர்களாகவும், சின்னத்திரை நட்சத்திரங்களாகவும் புகழ் பெற்ற தீபக் - நக்ஷத்திரா ஜோடி மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தீபக் தினகரனை ஏற்கனவே தென்றல் தொடரின் மூலம் காதல் நாயகனாக இயக்கிருந்தார் எஸ்.குமரன். இவர்களது கூட்டணியில் மீண்டும் ஓர் காதல் கதை என்பதும் நேயர்கள் எதிர்பார்ப்பை எகிர வைத்துள்ளது.
"தமிழும் சரஸ்வதியும்" தொடர் ஜுலை 12 ஆம் தேதி முதல் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.




