நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
ரோஜா சீரியல் மூலம் சின்னத்திரை நேயர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியங்கா நல்காரி. அதன்பின் ஜீ தமிழில் சீதாராமன் தொடரில் என்ட்ரி கொடுத்த அவர் காதல் கணவருக்காக நடிப்பை விட்டு விலகுவதாக அறிவித்து வெளியேறினார். ஆனால், திருமணமாகி ஒரு வருடங்கள் கூட ஆகாத நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்துவிட்டார். இதனையடுத்து சோஷியல் மீடியாவில் பலரும் பிரியங்கா கணவரை விட்டு பிரிந்தது குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனால் அப்செட்டான பிரியங்கா இன்ஸ்டாகிராம் பக்கத்தை டெலிட் செய்ய போவதாக அறிவித்துள்ளார். மேலும், புரோமோஷனுக்காக சிலர் அனுப்பிய நகைகள், ஆபரணங்கள், உடைகளையும் திருப்பி அனுப்பி விடுவதாக அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதனால், பிரியங்காவின் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.