‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

ஸ்ரீ, ஆல்பம் உள்ளிட்ட ஓரிரு படங்களில் நடித்தவர் பழம்பெரும் நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தியான நடிகை ஸ்ருத்திகா. திருமணத்திற்கு பின் சினிமாவை விட்டு ஒதுங்கியவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் ஊடக வெளிச்சம் பெற்றார். சினிமா செட்டாகாத காலக்கட்டத்தில் படிப்பை தொடர்ந்த ஸ்ருதிகா, அர்ஜுன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணமாகி 13 வருடங்கள் ஆகிறது.
இந்நிலையில், தன்னுடைய கணவர் குறித்து மிகவும் உருக்கமான பதிவை ஸ்ருதிகா அர்ஜுன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், ‛‛என்னுடைய சிரிப்பு, சந்தோஷம், மகிழ்ச்சிக்கு பின்னால் இருக்கக் கூடிய நபர் இவர்தான். கடவுள் எனக்கு கொடுத்த சிறந்த வரம். என்னுடைய சின்ன சின்ன வெற்றியை கூட பாராட்டி ஆனந்தப்படுவார். பெற்றோர் குழந்தையை பாராட்டுவது போல் இவர் என்னை பாராட்டுவார். மோசமான தருணங்களில் என் மீது அன்பு செலுத்துகிறார். தூண் போல எனக்கு உறுதுணையாக இருக்கிறார். அளவில்லாமல் காதலிப்பது எப்படி என்று இவரிடம் தான் கற்றுக்கொண்டேன். நான் இன்று இந்த இடத்தில் இருக்க இவரே காரணம்'' என தனது கணவர் குறித்து மிகவும் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.




