குட் பேட் அக்லி படத்தின் டிரைலர் அப்டேட் | ஸ்ருதி நாராயணனின் இன்ஸ்டா பதிவு | சிக்கந்தர் - மோசமில்லாத முதல் நாள் வசூல் | மாஸ்க், தொப்பி அணிந்தபடி டேட்டிங் செல்லும் விஜய்தேவர கொண்டா - ராஷ்மிகா | ரிலீஸிற்கு முன்பே பார்த்திருந்தால் மோகன்லால் அனுமதித்திருக்க மாட்டார் : மேஜர் ரவி கருத்து | தல வருகிறார், அவரை பாருங்கள் : அருண் விஜய் வெளியிட்ட பதிவு | ஏற்றி விட்ட ஏணியை மறந்து போன நடிகர்கள் : பாவமில்லையா பாரதிராஜா...! | மேலிடத்து உத்தரவு... கால்ஷீட் தராத தனுஷ் : தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | கண்ணப்பா ரிலீஸ் தள்ளிப்போனது : காரணம் இது தான் | விஷாலுக்கு ஜோடியாகும் துஷாரா விஜயன் |
ஸ்ரீ, ஆல்பம் உள்ளிட்ட ஓரிரு படங்களில் நடித்தவர் பழம்பெரும் நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தியான நடிகை ஸ்ருத்திகா. திருமணத்திற்கு பின் சினிமாவை விட்டு ஒதுங்கியவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் ஊடக வெளிச்சம் பெற்றார். சினிமா செட்டாகாத காலக்கட்டத்தில் படிப்பை தொடர்ந்த ஸ்ருதிகா, அர்ஜுன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணமாகி 13 வருடங்கள் ஆகிறது.
இந்நிலையில், தன்னுடைய கணவர் குறித்து மிகவும் உருக்கமான பதிவை ஸ்ருதிகா அர்ஜுன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், ‛‛என்னுடைய சிரிப்பு, சந்தோஷம், மகிழ்ச்சிக்கு பின்னால் இருக்கக் கூடிய நபர் இவர்தான். கடவுள் எனக்கு கொடுத்த சிறந்த வரம். என்னுடைய சின்ன சின்ன வெற்றியை கூட பாராட்டி ஆனந்தப்படுவார். பெற்றோர் குழந்தையை பாராட்டுவது போல் இவர் என்னை பாராட்டுவார். மோசமான தருணங்களில் என் மீது அன்பு செலுத்துகிறார். தூண் போல எனக்கு உறுதுணையாக இருக்கிறார். அளவில்லாமல் காதலிப்பது எப்படி என்று இவரிடம் தான் கற்றுக்கொண்டேன். நான் இன்று இந்த இடத்தில் இருக்க இவரே காரணம்'' என தனது கணவர் குறித்து மிகவும் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.