நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
இலக்கியா மற்றும் சுந்தரி ஆகிய தொடர்களில் இரண்டாவது ஹீரோவாக நடித்து வருகிறார் ஜெய் ஸ்ரீநிவாச குமார். ரசிகர்கள் மத்தியில் ஹீரோ இமேஜை பெற்றுள்ள இவருக்கு தற்போது உண்மையாகவே ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. மீனா என்கிற புதிய தொடரில் ஜெய் ஸ்ரீநிவாச குமார் தான் ஹீரோவாக கமிட்டாகியுள்ளார். இதற்கிடையில் இலக்கியா தொடரில் அவர் நடித்து வந்த கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் குறைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக இலக்கியா தொடரிலிருந்து ஜெய் ஸ்ரீநிவாச முழுவதுமாக விலகிவிட்டதாக தகவல் வெளியாகி வருகிறது. அதேசமயம் சுந்தரி தொடரில் ஜெய் ஸ்ரீநிவாசா தொடர்ந்து சித்தார்த் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும், இலக்கியா தொடரில் ஜெய் நடித்து வந்த கதாபாத்திரத்தில் இனி அரவிஷ் நடிக்க உள்ளதாகவும் சின்னத்திரை வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளியாகி வருகிறது.