'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் |

இலக்கியா மற்றும் சுந்தரி ஆகிய தொடர்களில் இரண்டாவது ஹீரோவாக நடித்து வருகிறார் ஜெய் ஸ்ரீநிவாச குமார். ரசிகர்கள் மத்தியில் ஹீரோ இமேஜை பெற்றுள்ள இவருக்கு தற்போது உண்மையாகவே ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. மீனா என்கிற புதிய தொடரில் ஜெய் ஸ்ரீநிவாச குமார் தான் ஹீரோவாக கமிட்டாகியுள்ளார். இதற்கிடையில் இலக்கியா தொடரில் அவர் நடித்து வந்த கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் குறைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக இலக்கியா தொடரிலிருந்து ஜெய் ஸ்ரீநிவாச முழுவதுமாக விலகிவிட்டதாக தகவல் வெளியாகி வருகிறது. அதேசமயம் சுந்தரி தொடரில் ஜெய் ஸ்ரீநிவாசா தொடர்ந்து சித்தார்த் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும், இலக்கியா தொடரில் ஜெய் நடித்து வந்த கதாபாத்திரத்தில் இனி அரவிஷ் நடிக்க உள்ளதாகவும் சின்னத்திரை வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளியாகி வருகிறது.




