'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் | பிடிகொடுக்காத நடிகரால் அதிருப்தியில் பிரமாண்ட இயக்குனர் |
கேரளாவை சேர்ந்த வித்யா மோகன் தமிழில் சில படங்களில் நடித்தார். வெள்ளித்திரை அவருக்கு கைகொடுக்காத நிலையில் சின்னத்திரையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஹிட் சீரியல்களில் லீட் ரோல்களில் நடித்து கலக்கி வருகிறார். தமிழில் இவர் நடித்த 'வள்ளி' நெடுந்தொடர் அமோக வரவேற்பை பெற்றது. தற்போது 'அபியும் நானும்' தொடரில் நடித்து வருகிறார். அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய வித்யா மோகன், இனி தாலியை கழட்டி விட்டு நடிக்கமாட்டேன் என ஸ்ட்ரிக்டாக கண்டிஷன் போட்டுள்ளதாக கூறியிருக்கிறார். 'என் தாலி எனக்கு ரொம்ப ஸ்பெஷல். எனக்கு அவர் போட்ட முதல் செயின். அதை கழட்டி வைத்துவிட்டு நடிக்க மாட்டேன். அப்படியொரு நிலை வந்தால் அந்த புராஜெக்டையே வேண்டாம் என கூறிவிடுவேன்' என கூறுகிறார். இந்த பேட்டியை பார்க்கும் பலரும் வித்யா மோகனுக்கு தாலி மீது இருக்கும் செண்டிமெண்டையும் கலாச்சாரத்தை மதிக்கும் அவரது குணத்தையும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.