சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
வீஜே பார்வதி அடிக்கடி எங்கேயாவது டூர் சென்று வீடியோக்களை பதிவிடுவார். இம்முறை அவர் தனது அம்மாவை ஊர்சுற்ற கூட்டி சென்றுள்ளார். அம்மாவிற்கு பெஸ்ட் ரிட்டர்யர்ட்மெண்ட் லைப் கொடுக்கும் வகையில் திருவண்ணாமலையில் ஒரு பிரபல ரிசாட்டிற்கு அம்மாவுடன் சென்று தங்கியுள்ளார். அங்கே வீஜே பார்வதி அம்மாவுடன் சேர்ந்து பல ஆக்டிவிட்டிகள், விளையாட்டுகள் என எஞ்சாய் செய்ததை ஒரு ஷார்ட் வீடியோவாக இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். தனது தந்தை இறப்பதற்கு முன் அம்மாவை கூட்டிச் செல்ல விரும்பிய இடம் திருவண்ணாமலை என்றும், அந்த ஆசையை தற்போது தான் நிறைவேற்றிவிட்டதாகவும் அந்த வீடியோவில் கூறியுள்ளார். மேலும், இருக்கும் கொஞ்ச காலத்திலேயே அம்மா அப்பாவுடன் நேரத்தை செலவழியுங்கள். அவர்கள் இல்லாத போதுதான் அவர்கள் அருமை நமக்கு புரியும். எனவே இருக்கும் போதே பெற்றோர்களுடன் சேர்ந்து செலிபிரேட் பண்ணலாம் என அட்வைஸூம் செய்துள்ளார். வீஜே பார்வதியின் இந்த வீடியோ உண்மையில் பெற்றோர் பற்றிய கருத்துக்கா? அல்லது அந்த ரிசார்ட்டின் விளம்பரத்துக்கா? என தெரியாமல் ரசிகர்களே மண்டையை பிய்த்துக்கொண்டு அவரிடம் கேள்விகள் கேட்டு வருகிறார்கள்.