அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீசன் 2 மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமீபத்தில் அந்த தொடரில் கதாநாயகியாக நடித்து வந்த ஆல்யா மானசா, பிரசவத்தின் காரணமாக வெளியேறிய நிலையில், ரியா விஸ்வநாத் என்ற புது நடிகை நடித்து வந்தார். அவரும் தனது நடிப்புத் திறமையால் மக்களின் மனதில் இடம் பிடித்து சந்தியா கதாபாத்திரத்தை தக்க வைத்துக் கொண்டார். இந்த தொடரில் கதாநாயகிக்கு இணையாக மிகவும் பிரபலமான கதாபாத்திரம் என்றால் அது வில்லி அர்ச்சனாவின் கதாபாத்திரம் தான்.
இந்த கதாபாத்திரத்தில் வீஜே அர்ச்சனா நடித்து காமெடியிலும் வில்லத்தனத்திலும் கலக்கி வந்தார். பாரதி கண்ணம்மா பரீனாவுக்கு அடுத்தப்படியாக அதிகமாக ரசிகர்களிடம் திட்டு வாங்கிய வில்லி நடிகை அர்ச்சனா தான். சமீபத்தில் நடந்த விஜய் டெலிவிஷன் விருது நிகழ்ச்சியில் கூட அர்ச்சனாவின் நடிப்பை பாராட்டி விருது வழங்கியிருந்தனர்.
இந்நிலையில், அர்ச்சனா தற்போது ராஜா ராணி 2 சீரியலை விட்டு விலகப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். எனினும், இது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் அர்ச்சனா தரப்பிலிருந்து வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.