ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 தொடரில் வில்லியாக நடித்து வருபவர் வீஜே அர்ச்சனா. பாரதி கண்ணம்மாவின் வெண்பா கதாபாத்திரத்திற்கு பின் சின்னத்திரையில் அதிகம் பேசப்படும் வில்லியாக பிரபலமாகியுள்ளார்.
இந்நிலையில், விஜய் டிவி விருது விழா சமீபத்தில் நடந்து முடிந்துள்ள நிலையில், அதன் புரோமோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில் வீஜே அர்ச்சனாவின் தாயார், 'என் மகளை எல்லோரும் திட்டுறாங்க. பரீனாவுக்கு கூட கல்யாணம் ஆகி குழந்த இருக்கு. என் பொண்ணுக்கு இனிமே தான் எல்லாம் நடக்கனும். சீரியலில் வில்லி என்பது வெறும் நடிப்பு தான். வெளியில் அவர்களை பார்க்கும் போது வெறுப்பு காட்டாதீங்க. உங்களுக்காக தான் அவங்க நடிக்கிறாங்க' என உருக்கமாக பேசியுள்ளார்.
சீரியலில் வில்லி என்பது எவ்வளவுக்கு எவ்வளவு பிரபலத்தை தருமோ, அதேவேளையில் சில ரசிகர்களின் வெறுப்பையும் சம்பாதிக்க நேரிடும். அந்த வகையில் அர்ச்சனாவும் சில நெகட்டிவான கமெண்ட்டுகளை சின்னத்திரை ரசிகர்களிடமிருந்து பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.