மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் ‛பைசன் காளமாடன்' | மீண்டும் த்ரில்லர் படத்தில் ஜி.வி.பிரகாஷ் | கடலை சுத்தம் செய்ய கிளம்பிய ரெஜினா | யுனிசெப் தூதராக கரீனா கபூர் நியமனம் | பிளாஷ்பேக்: 'கண்ணீர் திலகம்' ஸ்ரீரஞ்சனி | டைட்டானிக் கேப்டன் காலமானார் | ஐஸ்வர்யா லட்சுமி தோழிதான், காதலி இல்லை : அர்ஜூன் தாஸ் விளக்கம் | புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 தொடரில் வில்லியாக நடித்து வருபவர் வீஜே அர்ச்சனா. பாரதி கண்ணம்மாவின் வெண்பா கதாபாத்திரத்திற்கு பின் சின்னத்திரையில் அதிகம் பேசப்படும் வில்லியாக பிரபலமாகியுள்ளார்.
இந்நிலையில், விஜய் டிவி விருது விழா சமீபத்தில் நடந்து முடிந்துள்ள நிலையில், அதன் புரோமோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில் வீஜே அர்ச்சனாவின் தாயார், 'என் மகளை எல்லோரும் திட்டுறாங்க. பரீனாவுக்கு கூட கல்யாணம் ஆகி குழந்த இருக்கு. என் பொண்ணுக்கு இனிமே தான் எல்லாம் நடக்கனும். சீரியலில் வில்லி என்பது வெறும் நடிப்பு தான். வெளியில் அவர்களை பார்க்கும் போது வெறுப்பு காட்டாதீங்க. உங்களுக்காக தான் அவங்க நடிக்கிறாங்க' என உருக்கமாக பேசியுள்ளார்.
சீரியலில் வில்லி என்பது எவ்வளவுக்கு எவ்வளவு பிரபலத்தை தருமோ, அதேவேளையில் சில ரசிகர்களின் வெறுப்பையும் சம்பாதிக்க நேரிடும். அந்த வகையில் அர்ச்சனாவும் சில நெகட்டிவான கமெண்ட்டுகளை சின்னத்திரை ரசிகர்களிடமிருந்து பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.