பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் தொடரில் புலி என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமாகி அசத்தியவர் ராகவேந்திரன். இதனால் அவர் புலி ராகவேந்திரன் என்றே அழைக்கப்பட்டார். அவருக்கு திக்கு வாய் என்பதால் நடிப்பதற்கான வாய்ப்பு எளிதில் கிடைக்காது, ஆனாலும் அன்றைய காலக்கட்டத்தில் கனா காணும் காலங்கள் தொடரை எடுத்த படக்குழுவினர் ராகவேந்திரனை ஆதரித்து நடிக்க வைத்தது. அவரும் அங்கொன்றும் இங்கொன்றுமாய சில சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது 'காற்றுக்கென்ன வேலி' தொடரில் மாறன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் ராகவேந்திரன், அந்த சீரியலை விட்டு விலகுவதோடு, இனி நடிக்கமாட்டேன் என வீடியோ வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், 'நான் 15 வருடமாக மீடியா துறையில் இருக்கிறேன். முன்னேற்றம் இல்லாமல் இன்றும் ஆரம்பித்த இடத்திலேயே தான் நிற்கிறேன். எனக்கு கேரக்டர் ரோலில் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், அதுவும் சில காலங்களில் நீக்கப்பட்டு விடுகிறது. யாரும் எனக்கு வாய்ப்பு கொடுக்க தயாராக இல்லை என்கின்றனர். நானும் யாருக்கும் ஜால்ரா அடிக்க தயாராக இல்லை.
மாறன் கதாபாத்திரம் வேறு ட்ராக்கில் சென்று கொண்டிருக்கிறது. இனி அதை எப்போது வேண்டுமானாலும் நிறுத்தி என்னை தூக்கி எறிந்துவிடுவார்கள். எனக்கும் பொருளாதார ரீதியாக கஷ்டம் இருக்கிறது. இனிமேலும் நடிக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தால் எதுவுமே பண்ண முடியாது. நான் சீரியலை விட்டு விலகுகிறேன்' என உருக்கமாக பேசியுள்ளார்.