ரஜிஷா விஜயனுக்கு கை கொடுக்கும் வருடமாக 2025 அமையுமா? | ஜோதிகா பட பெண் இயக்குனரின் படத்திற்கு கேரள அரசு வரி விலக்கு | பஹத் பாசில் பட தேசிய விருது கதாசிரியரின் இயக்கத்தில் நடிக்கும் 'ஜென்டில்மேன் 2' ஹீரோ | 'காந்தாரா-2' படப்பிடிப்பில் மீண்டும் ஒரு மலையாள நடிகர் மரணம் | பஹத் பாசில் - எஸ்ஜே சூர்யா படம் டிராப் ஏன்? மனம் திறந்த இயக்குனர் விபின் தாஸ் | விக்ரம் 63 படம் கைவிடப்பட்டதா? | கூலி, குபேரா படங்கள் குறித்து நாகார்ஜுனா வெளியிட்ட தகவல் | அட்லி படத்தை அடுத்து மேலும் 2 புதிய படங்களில் கமிட்டான அல்லு அர்ஜுன் | தக் லைப் படத்தின் எட்டாவது நாள் வசூல் என்ன | சிம்புவை பற்றி பேச மறுக்கும் நிதி அகர்வால் |
விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் தொடரில் புலி என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமாகி அசத்தியவர் ராகவேந்திரன். இதனால் அவர் புலி ராகவேந்திரன் என்றே அழைக்கப்பட்டார். அவருக்கு திக்கு வாய் என்பதால் நடிப்பதற்கான வாய்ப்பு எளிதில் கிடைக்காது, ஆனாலும் அன்றைய காலக்கட்டத்தில் கனா காணும் காலங்கள் தொடரை எடுத்த படக்குழுவினர் ராகவேந்திரனை ஆதரித்து நடிக்க வைத்தது. அவரும் அங்கொன்றும் இங்கொன்றுமாய சில சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது 'காற்றுக்கென்ன வேலி' தொடரில் மாறன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் ராகவேந்திரன், அந்த சீரியலை விட்டு விலகுவதோடு, இனி நடிக்கமாட்டேன் என வீடியோ வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், 'நான் 15 வருடமாக மீடியா துறையில் இருக்கிறேன். முன்னேற்றம் இல்லாமல் இன்றும் ஆரம்பித்த இடத்திலேயே தான் நிற்கிறேன். எனக்கு கேரக்டர் ரோலில் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், அதுவும் சில காலங்களில் நீக்கப்பட்டு விடுகிறது. யாரும் எனக்கு வாய்ப்பு கொடுக்க தயாராக இல்லை என்கின்றனர். நானும் யாருக்கும் ஜால்ரா அடிக்க தயாராக இல்லை.
மாறன் கதாபாத்திரம் வேறு ட்ராக்கில் சென்று கொண்டிருக்கிறது. இனி அதை எப்போது வேண்டுமானாலும் நிறுத்தி என்னை தூக்கி எறிந்துவிடுவார்கள். எனக்கும் பொருளாதார ரீதியாக கஷ்டம் இருக்கிறது. இனிமேலும் நடிக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தால் எதுவுமே பண்ண முடியாது. நான் சீரியலை விட்டு விலகுகிறேன்' என உருக்கமாக பேசியுள்ளார்.