ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் |
தமிழ்ச்செல்வி தொடர் மூலம் தமிழ் சின்னத்திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஆஷிகா படுகோன். தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழி சீரியல்களிலும் நடித்து கலக்கி வந்த ஆஷிகாவுக்கு சமீபத்தில் சேட்டன் ஷெட்டி என்பவருடன் திருமணம் முடிந்தது. திருமணத்திற்கு பிறகு ஆஷிகா நடிக்க மாட்டார் என்றே ரசிகர்கள் பலரும் கருதினர்.
இந்நிலையில் அவர் புதிய சீரியலான சிங்கப்பெண்ணே என்ற தொடரில் மீண்டும் கதாநாயாகியாக நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. எனினும், ஆஷிகாவை மீண்டும் திரையில் காணப்போகும் மகிழ்ச்சியில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். முன்னதாக சிங்கப்பெண்ணே தொடரில் பிரபல தொகுப்பாளினி டிடியின் சகோதரி பிரியதர்ஷினி நடிப்பதாக இருந்தது. தற்போது அந்த தொடரில் அவருக்கு பதிலாக ஆஷிகா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.