'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தமிழ்ச்செல்வி தொடர் மூலம் தமிழ் சின்னத்திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஆஷிகா படுகோன். தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழி சீரியல்களிலும் நடித்து கலக்கி வந்த ஆஷிகாவுக்கு சமீபத்தில் சேட்டன் ஷெட்டி என்பவருடன் திருமணம் முடிந்தது. திருமணத்திற்கு பிறகு ஆஷிகா நடிக்க மாட்டார் என்றே ரசிகர்கள் பலரும் கருதினர்.
இந்நிலையில் அவர் புதிய சீரியலான சிங்கப்பெண்ணே என்ற தொடரில் மீண்டும் கதாநாயாகியாக நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. எனினும், ஆஷிகாவை மீண்டும் திரையில் காணப்போகும் மகிழ்ச்சியில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். முன்னதாக சிங்கப்பெண்ணே தொடரில் பிரபல தொகுப்பாளினி டிடியின் சகோதரி பிரியதர்ஷினி நடிப்பதாக இருந்தது. தற்போது அந்த தொடரில் அவருக்கு பதிலாக ஆஷிகா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.