உறவுகள் பொய் சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது : தமன்னா | 15 வருடத்திற்கு பிறகு மலையாள படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் மோகினி | மம்முட்டிக்காக கண்ணூர் கோவிலில் பொன்குடம் நேர்த்திக்கடன் செலுத்திய ரசிகர் | ரெட் லேபிள் படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட நடிகை சிம்ரன் | இப்ப ஹீரோ, அடுத்து இயக்கம் : புதுமாப்பிள்ளை அபிஷன் ஜீவிந்த் பேட்டி | இந்தப்போக்கு மோசமானது : நிவேதா பெத்துராஜ் | தன் இறப்புக்கு லீவு வாங்கிக் கொடுத்த அப்பா : மேடையில் கண் கலங்கிய ஆனந்தராஜ் | அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் | ஜெயிலர் 2 : சிறப்புத் தோற்றத்தில் பகத் பாசில் |

சின்னத்திரை நடிகையான வீணா வெங்கடேஷ், அவர் நடித்து வந்த இரண்டு சீரியல்களிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளதையடுத்து கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிரபல நடிகை வீணா வெங்கடேஷ் சித்தி 2 சீரியலிலும், விஜய் டிவியின் காற்றுக்கென்ன வேலி சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். சமீபத்தில் விஜய் டிவி சீரியலில் அவர் நடித்த கதாபாத்திரத்தில் வேறொருவர் மாற்றப்பட்டார். இந்நிலையில் சித்தி 2 சீரியலிலிருந்தும் வீணா வெங்கடேஷை கழட்டி விட்டுள்ளனர்.
இது குறித்து பேசியுள்ள வீணா வெங்கடேஷ், 'சித்தி 2-வில் சுப்புலெட்சுமியாகவும், காற்றுக்கென்ன வேலி சீரியலில் மீனாட்சியாகவும் இரண்டு அருமையான கதாபாத்திரங்களில் நடித்து வந்தேன். இந்த இரண்டு சீரியல்களும் எனக்கு குடும்பம் போல இருந்தது. ஆனால், திடீரென எனக்கு கொரோனா வந்து விட்டது. சீரியல் குழுவினர் எனக்காக கொஞ்சகாலம் காத்திருந்தார்கள். ஆனால், எனக்கு டெஸ்ட் முடிய இன்னும் இரண்டு நாட்கள் தேவைப்பட்டது. இந்த இரண்டு நாட்கள் மட்டும் அவர்கள் காத்திருந்தால் நான் மீண்டும் சீரியலில் நடிக்க வந்திருப்பேன். ஆனால், அவர்கள் எனக்கு பதில் வேறு நடிகர்களை மாற்றிவிட்டார்கள். அந்த இரண்டு தொடர்களையும் நான் மிகவும் மிஸ் செய்கிறேன். நிச்சயமாக புது புராஜெக்டில் மீண்டும் உங்களை வந்து சந்திக்கிறேன்' என உருக்கமாக பேசியுள்ளார்.