‛நரிவேட்டை' முதல் ‛8 வசந்தலு' வரை... ஓடிடியில் இந்தவார வரவு என்னென்ன...? | பெரிய பட்ஜெட்டில் 3டி அனிமேஷனில் தயாராகும் பெருமாளின் அவதாரங்கள் | வெப் தொடரில் நாயகன் ஆன சரவணன் | 'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் |
சின்னத்திரை நடிகையான வீணா வெங்கடேஷ், அவர் நடித்து வந்த இரண்டு சீரியல்களிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளதையடுத்து கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிரபல நடிகை வீணா வெங்கடேஷ் சித்தி 2 சீரியலிலும், விஜய் டிவியின் காற்றுக்கென்ன வேலி சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். சமீபத்தில் விஜய் டிவி சீரியலில் அவர் நடித்த கதாபாத்திரத்தில் வேறொருவர் மாற்றப்பட்டார். இந்நிலையில் சித்தி 2 சீரியலிலிருந்தும் வீணா வெங்கடேஷை கழட்டி விட்டுள்ளனர்.
இது குறித்து பேசியுள்ள வீணா வெங்கடேஷ், 'சித்தி 2-வில் சுப்புலெட்சுமியாகவும், காற்றுக்கென்ன வேலி சீரியலில் மீனாட்சியாகவும் இரண்டு அருமையான கதாபாத்திரங்களில் நடித்து வந்தேன். இந்த இரண்டு சீரியல்களும் எனக்கு குடும்பம் போல இருந்தது. ஆனால், திடீரென எனக்கு கொரோனா வந்து விட்டது. சீரியல் குழுவினர் எனக்காக கொஞ்சகாலம் காத்திருந்தார்கள். ஆனால், எனக்கு டெஸ்ட் முடிய இன்னும் இரண்டு நாட்கள் தேவைப்பட்டது. இந்த இரண்டு நாட்கள் மட்டும் அவர்கள் காத்திருந்தால் நான் மீண்டும் சீரியலில் நடிக்க வந்திருப்பேன். ஆனால், அவர்கள் எனக்கு பதில் வேறு நடிகர்களை மாற்றிவிட்டார்கள். அந்த இரண்டு தொடர்களையும் நான் மிகவும் மிஸ் செய்கிறேன். நிச்சயமாக புது புராஜெக்டில் மீண்டும் உங்களை வந்து சந்திக்கிறேன்' என உருக்கமாக பேசியுள்ளார்.