ஹரிஷ் கல்யாண் மகளின் பெயர் 'கிரியா ஹரிஷ்' | விஜய் பெரிய ஸ்டார், அறிவுரை தேவையில்லை : பவன் கல்யாண் | விமர்சனம் வந்தால் வளருகிறீர்கள் என அர்த்தம் : மாளவிகா மோகனன் | அண்ணன், தம்பியை இயக்கும் வினோத் | ஏஜிஎஸ் படத்தில் சாய் அபயங்கர் : இசையா.... ஹீரோவா... | சூரியின் மண்டாடி படத்தை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ் | அஜித் பிறந்தநாளில் ‛ஆழ்வார்' ரீ ரிலீஸ்? | பிரபல அமெரிக்க நிறுவனத்தின் முதல் இந்திய விளம்பர தூதராக பொறுப்பேற்ற 'அனிமல்' பட நடிகை | கோவையில் கேபிள் டிவியில் ‛ஜனநாயகன்' படம் ஒளிபரப்பு : ஒருவர் கைது | போகிற போக்கில் கதைகளை தேர்ந்தெடுக்காதீர்கள் ; மிருணாள் தாக்கூருக்கு 'கல்கி' இயக்குனர் வேண்டுகோள் |

தெலுங்கு சினிமாவில் தற்போது அதிகம் எதிர்பார்க்கப்படும் படம் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் - ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகிவரும் ஆர்ஆர்ஆர். ஆனால் அப்படிப்பட்ட படத்திற்கு ஒரு சரியான ரிலீஸ் தேதி கிடைக்காமல் அவர் அல்லாடி வருவது தான் மிகப்பெரிய விஷயமாக தெலுங்கு திரையுலகில் பேசப்பட்டு வருகிறது.
இந்த படத்தை வரும் ஜனவரி மாதம் சங்கராந்தி பண்டிகையை ஒட்டி ரிலீஸ் செய்ய விரும்புகிறார் இயக்குனர் ராஜமவுலி. ஆனால் அதே நாளில் பிரபாஸ் நடித்த ராதே ஷ்யாம் படம் ரிலீஸ் ஆக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. அதேபோல மகேஷ்பாபு நடித்து வரும் சர்க்காரு வாரி பாட்டா படமும் அதே சங்கராந்தி பண்டிகையில் தான் வெளியாகும் என தெரிகிறது.
இந்த நிலையில் சங்கராந்தி பண்டிகையில் வெளியாக உள்ள படங்களின் ஹீரோக்களிடம் ராஜமவுலி தனது ஆர்ஆர்ஆர் படத்திற்காக விட்டுக்கொடுக்குமாறு நட்புடன் கோரிக்கை வைத்து வருகிறாராம். ஆனால் ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தின் மூலம் மிகப்பெரிய உயரத்திற்கு சென்ற பிரபாஸ், அவரது கோரிக்கையை ஏற்க முடியாத நிலையில் இருப்பதாக கைவிரித்து விட்டாராம்.
அதேசமயம் மகேஷ்பாபு ராஜமவுலியின் கோரிக்கைக்கு இணங்கி தனது படத்தின் தேதியை மாற்றி வைத்துக் கொள்ள சம்மதித்து விட்டதாக தெரிகிறது. ஏற்கனவே பாகுபலி படத்தின் முதல் பாகம் வெளியான போதும் இதேபோல மகேஷ்பாபு தனது படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி வைத்துக்கொண்டார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல ராஜமவுலியின் அடுத்த படத்தில் மகேஷ்பாபு தான் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார் என்பதும் மகேஷ்பாபுவின் இந்த இணக்கமான முடிவுக்கு ஒரு காரணம் என்றும் சொல்லப்படுகிறது.




