துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
தெலுங்கு சினிமாவில் தற்போது அதிகம் எதிர்பார்க்கப்படும் படம் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் - ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகிவரும் ஆர்ஆர்ஆர். ஆனால் அப்படிப்பட்ட படத்திற்கு ஒரு சரியான ரிலீஸ் தேதி கிடைக்காமல் அவர் அல்லாடி வருவது தான் மிகப்பெரிய விஷயமாக தெலுங்கு திரையுலகில் பேசப்பட்டு வருகிறது.
இந்த படத்தை வரும் ஜனவரி மாதம் சங்கராந்தி பண்டிகையை ஒட்டி ரிலீஸ் செய்ய விரும்புகிறார் இயக்குனர் ராஜமவுலி. ஆனால் அதே நாளில் பிரபாஸ் நடித்த ராதே ஷ்யாம் படம் ரிலீஸ் ஆக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. அதேபோல மகேஷ்பாபு நடித்து வரும் சர்க்காரு வாரி பாட்டா படமும் அதே சங்கராந்தி பண்டிகையில் தான் வெளியாகும் என தெரிகிறது.
இந்த நிலையில் சங்கராந்தி பண்டிகையில் வெளியாக உள்ள படங்களின் ஹீரோக்களிடம் ராஜமவுலி தனது ஆர்ஆர்ஆர் படத்திற்காக விட்டுக்கொடுக்குமாறு நட்புடன் கோரிக்கை வைத்து வருகிறாராம். ஆனால் ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தின் மூலம் மிகப்பெரிய உயரத்திற்கு சென்ற பிரபாஸ், அவரது கோரிக்கையை ஏற்க முடியாத நிலையில் இருப்பதாக கைவிரித்து விட்டாராம்.
அதேசமயம் மகேஷ்பாபு ராஜமவுலியின் கோரிக்கைக்கு இணங்கி தனது படத்தின் தேதியை மாற்றி வைத்துக் கொள்ள சம்மதித்து விட்டதாக தெரிகிறது. ஏற்கனவே பாகுபலி படத்தின் முதல் பாகம் வெளியான போதும் இதேபோல மகேஷ்பாபு தனது படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி வைத்துக்கொண்டார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல ராஜமவுலியின் அடுத்த படத்தில் மகேஷ்பாபு தான் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார் என்பதும் மகேஷ்பாபுவின் இந்த இணக்கமான முடிவுக்கு ஒரு காரணம் என்றும் சொல்லப்படுகிறது.