மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
பாலிவுட்டின் வசூல் நாயகர்களில் ஒருவர் அக்ஷய் குமார். அவர் நடித்த 'பெல்பாட்டம்' படம் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு மகாராஷ்டிரா தவிர மற்ற முக்கிய வட இந்திய மாநிலங்களில் தியேட்டர்களில் வெளியானது. ஆனால், மக்கள் எதிர்பார்த்த அளவிற்கு தியேட்டர்களுக்கு வரவில்லை. பொதுவாக அக்ஷய்குமார் படம் வெளிவந்தால் ஒரு வாரத்திற்குள்ளாகவே 100 கோடி வசூலைத்தாண்டி விடும். இந்தப் படத்தைப் பொறுத்தவரையில் கடந்த பத்து நாட்களில் 25 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது. எதிர்பார்த்த தொகையை விடவும் அது மிகவும் குறைவுதான். இதற்கு மேலும் வசூல் அதிகரிக்கவும் வாய்ப்பில்லை.
பட வெளியீட்டிற்கு முன்பு படத்தைத் தியேட்டர்களில் வெளியிட தாங்கள் பெரிய ரிஸ்க் எடுப்பதாகவும், இந்தப் படம் 30 கோடி ரூபாய் வசூலித்தாலே அது 100 கோடி ரூபாய் வசூலிப்பதற்கு சமம் என்றும் அக்ஷ்ய்குமார் தெரிவித்திருந்தார்.
அக்ஷய்குமார் படத்திற்கே இந்த நிலைமை என்றால் தென்னிந்தியாவில் வெளியாகும் படங்களின் வசூல் நிலைமை எப்படியிருக்கும் என்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை என திரையுலகில் கவலைப்படுகிறார்கள். அதனால், மக்கள் முழுவதுமாக இயல்பு நிலைக்குத் திரும்பும் வரையில் பல பெரிய படங்களை பாலிவுட்டிலும், டோலிவுட்டிலும் தள்ளி வைக்க முடிவு செய்துள்ளார்கள்.