'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
பாலிவுட்டின் வசூல் நாயகர்களில் ஒருவர் அக்ஷய் குமார். அவர் நடித்த 'பெல்பாட்டம்' படம் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு மகாராஷ்டிரா தவிர மற்ற முக்கிய வட இந்திய மாநிலங்களில் தியேட்டர்களில் வெளியானது. ஆனால், மக்கள் எதிர்பார்த்த அளவிற்கு தியேட்டர்களுக்கு வரவில்லை. பொதுவாக அக்ஷய்குமார் படம் வெளிவந்தால் ஒரு வாரத்திற்குள்ளாகவே 100 கோடி வசூலைத்தாண்டி விடும். இந்தப் படத்தைப் பொறுத்தவரையில் கடந்த பத்து நாட்களில் 25 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது. எதிர்பார்த்த தொகையை விடவும் அது மிகவும் குறைவுதான். இதற்கு மேலும் வசூல் அதிகரிக்கவும் வாய்ப்பில்லை.
பட வெளியீட்டிற்கு முன்பு படத்தைத் தியேட்டர்களில் வெளியிட தாங்கள் பெரிய ரிஸ்க் எடுப்பதாகவும், இந்தப் படம் 30 கோடி ரூபாய் வசூலித்தாலே அது 100 கோடி ரூபாய் வசூலிப்பதற்கு சமம் என்றும் அக்ஷ்ய்குமார் தெரிவித்திருந்தார்.
அக்ஷய்குமார் படத்திற்கே இந்த நிலைமை என்றால் தென்னிந்தியாவில் வெளியாகும் படங்களின் வசூல் நிலைமை எப்படியிருக்கும் என்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை என திரையுலகில் கவலைப்படுகிறார்கள். அதனால், மக்கள் முழுவதுமாக இயல்பு நிலைக்குத் திரும்பும் வரையில் பல பெரிய படங்களை பாலிவுட்டிலும், டோலிவுட்டிலும் தள்ளி வைக்க முடிவு செய்துள்ளார்கள்.