‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மலையாளத்தில் வெளிவந்த படம் பரான்சிக். டொவினா தாமஸ் மம்தா மோகன் தாஸ், ரெபா மோனிகா, மோகன் சர்மா, பிரதாப்போத்தன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். கொரோனா காலத்துக்கு முன்பு தியேட்டரில் வெளியான படம், கொரோனா வந்ததும் ஓடிடியில் வெளியானது. அகில் ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்திருந்தார். ஜேக்ஸ் பிஜோய் இசை அமைத்திருந்தார். அனஸ்கான், அகில்பால் இயக்கி இருந்தார்கள்.
இந்த படம் தற்போது "கடைசி நொடிகள்" எனும் பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்படுகிறது. விஸ்வசாந்தி பிக்சர்ஸ் வெளியிடுகிறது. ஏ.ஆர்.கே ராஜராஜா தமிழ் மொழிமாற்றம் செய்திருக்கிறார்.
வரிசையாக பெண் குழந்தைகள் கொலை செய்யப்படுகின்றனர். அந்த கொலைகளை செய்த கொலைகாரனை பிடிப்பதற்காக போலீஸ் ஒரு சிறப்பு படை அமைக்கிறது. அதில் உதவியாளராக பாரன்ஸிக் ஆபீஸர் ஒருவரும் நியமிக்கப்படுகிறார். கொலைகளும் கொலை நடத்திய விதமும் ஒரே மாதிரி இருப்பதால் கொலைகாரன் ஒருவரே தான் செய்திருக்கனும் என்று பாரன்ஸிக் ஆபீசர் கண்டுபிடிக்கிறார்.
போலீசார் இதனை ஏற்க மறுக்கிறார்கள். மெல்ல மெல்ல அந்த போலீஸ் துறையை நம்ப வைத்து அந்த உண்மை குற்றவாளியை பாரன்ஸிக் ஆபீசர் கண்டுபிடிப்பதுதான் கதை. பாரன்ஸிக் ஆபீசராக டொவினோ தாமஸ் நடித்துள்ளார்.