தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் படமான ஸ்ரீதரின் முதல் கதை | காஜல் அகர்வாலுக்கு என்னாச்சு... | கென்யா ட்ரிப்பில் மொபைல் போனை பறிகொடுத்த பிரயாகா மார்ட்டின் | மாதவனை பழிக்குப்பழி வாங்கி விட்டேன் : அஜய் தேவ்கன் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தீபாவளி ரிலீஸாக வெளியாகும் அனுபமா பரமேஸ்வரனின் இரண்டு படங்கள் |
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்து வரும் படம் ‛‛காத்துவாக்குல ரெண்டு காதல்''. இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் நடந்து வருகிறது. இதற்காக விஜய் சேதுபதி, சமந்தா உள்ளிட்ட படக்குழுவினர் புதுச்சேரியில் முகாமிட்டுள்ளனர். இதனிடையே நேற்று (ஆக., 19) புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை விஜய் சேதுபதி சந்தித்து பேசினார். இதற்கான காரணம் வெளியாகி உள்ளது. அதாவது புதுச்சேரியில் சினிமா படப்பிடிப்புக்கு நாள் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது அது ரூ.28 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதை குறைக்க சொல்லி முதல்வரிடம் வலியுறுத்தி உள்ளார் விஜய் சேதுபதி. முதல்வரும் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார்.