காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனனின் தாயாரும், பின்னணி பாடகியுமான கல்யாணி மேனன்(80) உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி இன்று(ஆக., 2) காலமானார். நல்லதொரு குடும்பம் படத்தில் செவ்வானமே பொன் மேகமே என்ற பாடல் மூலம் பாடகியாக அறிமுகமான இவர், தொடர்ந்து புதிய மன்னர்கள்(பாடல் : வாடி சாத்துக்குடி), காதலன்(பாடல் : இந்திரையோ இவள் சுந்தரியோ), முத்து(பாடல் : குலுவாலிலே) அலைபாயுதே(பாடல் : அலைபாயுதே) உள்ளிட்ட பல படங்களில் பாடி உள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இறுதிச்சடங்கு நாளை(ஆக., 3) மதியம் 2மணிக்கு பெசன்ட் நகரில் உள்ள மயானத்தில் நடக்கிறது. கல்யாணி மேனின் இரு மகன்களில் ஒருவரான ராஜீவ் மேனன், இந்திய சினிமாவில் முன்னணி ஒளிப்பதிவாளராகவும், தமிழில் பிரபல இயக்குனராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




