ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கயிருந்த படம் ராணா. இப்படத்தின் பூஜை சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்ற அன்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுமருத்துவமனையில்அனுமிக்கப்பட்டார் ரஜினி. அதையடுத்து சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவிட்டு சென்னை திரும்பினார்.
அதையடுத்து ராணா படம் தொடங்கப்படவில்லை. இதனால் ரஜினியுடன் முதன்முதலாக தீபிகா படுகோனே ஜோடி சேர இருந்தது தடைபட்டது. இருப்பினும் அதையடுத்து செளந்தர்யா ரஜினி இயக்கிய கோச்சடையான் என்ற அனிமேசன் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார் தீபிகா படுகோனே.
இந்தநிலையில் தற்போது அண்ணாத்த படத்தில் நடித்துள்ள ரஜினி அடுத்து கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்கும் படத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், அப்படத்தில் தீபிகா படுகோனே நாயகியாக நடிக்கப்போவதாக தற்போது ஒரு புதிய செய்தி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.