இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
'இந்தியன் 2' பட விவகாரத்தில் தங்களது படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு படங்களை இயக்க ஷங்கர் போகக் கூடாது என தயாரிப்பு நிறுவனமான லைகா வழக்கு தொடுத்திருந்தது. அந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதன் காரணமாக ஷங்கர், ராம் சரண் கூட்டணி சேர உள்ள தெலுங்குப் படத்திற்கான சிக்கலுக்கு தீர்வு கிடைத்துள்ளது. வழக்கின் காரணமாக இப்படத்தை ஷங்கர் இயக்குவாரா மாட்டாரா என்ற சந்தேகம் நிலவி வந்தது. ராம் சரண் கூட ஷங்கருக்கு ஒரு வாரம் மட்டுமே டைம் கொடுத்ததாகவும் டோலிவுட்டில் சொன்னார்கள்.
தற்போது தனக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளதால் ராம் சரண் படத்தை ஷங்கர் தாராளமாக இயக்கலாம். இருப்பினும் 'இந்தியன் 2' படத்தைத் தயாரிக்க சுமார் 200 கோடி ரூபாய் செலவு செய்த தயாரிப்பாளரை ஷங்கர் தவிக்க விட்டுச் செல்வது குறித்து தமிழ் தயாரிப்பாளர்கள் சிலர் கொதிப்பில் இருக்கிறார்கள்.
சமீப காலமாக சில முன்னணி இயக்குனர்களும், நடிகர்களும் தமிழ் தயாரிப்பாளர்களைப் புறக்கணித்து தெலுங்கு தயாரிப்பாளர்களுக்கு முக்கியத்துவம் தருவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
ஷங்கர், விஜய், தனுஷ் ஆகியோரது அடுத்த படங்களை தெலுங்கு தயாரிப்பாளர்கள் தான் தயாரிக்கப் போகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.