ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் |
நடிகர் ஹம்சவர்தனின் மனைவியும், நடிகையுமான ரேஷ்மா என்கிற சாந்தி(வயது 42) நேற்று இரவு காலமானார்.
மறைந்த பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் மகன் ஹம்சவர்தன். ‛‛புன்னகை தேசம், வடுகபட்டி மாப்பிள்ளை, மம்முட்டி உடன் ஜூனியர் சீனியர்'' போன்ற படங்களில் நடித்துள்ளார். இவரது மனைவி சாந்தி. சினிமாவில் ரேஷ்மா என்ற பெயரில் கிழக்கு முகம், பூமணி உள்ளிட்ட சில படங்களில் நாயகியாக நடித்துள்ளார். கடந்த மாதம் சாந்தி கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கொரோனா நெகட்டிவ் என வந்தபோதும் மூச்சு திணறல் பிரச்னையில் தொடர் சிகிச்சையில் இருந்தார். இந்நிலையில் நேற்று இரவு உயிரிழந்தார்.
சாந்தியின் உடல் தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. இன்று மதியம் 2.30 மணிக்கு பெசன்ட் நகர் மின்மயானத்தில் இறுதிச்சடங்கு நடக்கிறது. ஹம்சவர்தன் - சாந்தி தம்பதிக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். கொரோனாவாலும், அந்த நோயின் தாக்கத்தாலும் திரையுலகில் அடுத்தடுத்து பல மரணங்கள் நிகழ்ந்து உள்ளது. இது திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.