மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
நம் கண்ணுக்குத் தெரியாத பல திறமைசாலிகள் உலகத்தின் பல இடங்களில் இருக்கத்தான் செய்கிறார்கள். சிலருக்கு சரியான வாய்ப்புகள் கிடைத்து மேலேறி வருகிறார்கள். சிலருக்கு அந்த சந்தர்ப்பம் சரியாக அமையாமல் அப்படியே இருக்கிறார்கள்.
இந்த சமூக வலைத்தள உலகத்தில் பல திறமைசாலிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு வாய்ப்புகள் தேடிச் செல்கின்றன. சில நாட்களுக்கு முன் ஒருவர், தெருவில் பூம் பூம் மாடு வைத்துக் கொண்டு நாதஸ்வரம் வாசித்து யாசகம் கேட்கும் வீடியோ ஒன்றை ஒருவர் பகிர்ந்திருந்தார்.
அந்த வீடியோவை இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ்குமார் ஷேர் செய்து “இவர் யார் எனத் தெரிந்தால் அவரை பதிவுக்கு பயன்படுத்திக் கொள்வேன். மிகவும் திறமைசாலி, நோட்ஸ்களில் மிகவும் துல்லியம்,” எனப் பாராட்டியிருந்தார்.
அன்றைய தினமே அவர் பெயர் நாராயணன் என்றும் அவரது தொலைபேசியையும் ஒருவர் பகிர்ந்தார். பெங்களூரு தெருக்களில் பூம் பூம் மாட்டுடன், நாதஸ்வரம் வாசிக்கும் அந்தக் கலைஞருக்கு விரைவில் தன் இசையில் வாசிக்க வாய்ப்பளிப்பதாக ஜிவி பிரகாஷ்குமார் பதிவிட்டுள்ளார்.
இப்படித்தான் 2019ம் வருடம் கிருஷ்ணகிரி மாவட்டம், நொச்சிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திருமூர்த்தி என்ற பார்வையற்ற இளைஞர் ஒருவர் பாடிய 'கண்ணாண கண்ணே' பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. அந்த இளைஞரை அழைத்து தனது இசையில் வெளிவந்த 'சீறு' படத்தில் 'செவ்வந்தியே...' என்ற பாடலைப் பாட வைத்தார் இசையமைப்பாளர் இமான்.