ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | தமிழகம் எனக்கு உறுதுணையாக உள்ளது : நன்றி சொன்ன கமல் | விஜய்சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தேவுக்கு பதிலாக நிவேதா தாமஸ்? | விக்ரம் சுகுமாரன் மறைவுக்குப் பிறகு ஓடிடியில் வெளியான மதயானை கூட்டம் | தாரே ஜமீன் பர் படத்தை யு-டியூப்பில் இலவசமாக வெளியிடும் அமீர்கான் | அறிவுரை சொல்பவர்கள் முதலில் தாங்கள் ஒழுங்கானவர்களா? : நடிகர் விநாயகன் கிண்டல் | அவசர அவசரமாக முடிக்கப்பட்ட பாலியல் வழக்குகள் ; அரசுக்கு எதிராக பார்வதி காட்டம் | ஹரி ஹர வீர மல்லு படம் தள்ளிப்போகிறதா? | ரேவதி இயக்கத்தில் பிரியாமணியின் ‛குட் ஒயிப்' | பெண் இயக்குனரின் பேண்டசி படம் 'மரகதமலை' |
நாடெங்கிலும் கொரோனா இரண்டாவது அலை பரவ துவங்கியுள்ளது. கடந்த வருடம் முதல் கட்டத்தை எதிர்கொண்டது போல, தற்போதும் சிகிச்சைக்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டாலும் கூட, ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை மற்றும் படுக்கை வசதிகள் கிடைக்கவில்லை என்கிற செய்திகளும் வெளியாகி வருகின்றன. இது உண்மைதான் என, தனது சொந்த அனுபவத்தில் இருந்து வேதனையுடன் தெரிவித்துள்ளார் பிரபல கன்னட நடிகரும் இயக்குனர் இசையமைப்பாளர் என பன்முகம் கொண்டவருமான சாது கோகிலா.
இதுபற்றி அவர் கூறும்போது, “கடந்த சில தினங்களுக்கு முன் எனது சகோதரரின் மகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டபோது, மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தோம்.. ஆனால் பற்றாக்குறை காரணமாக, அவனுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் உடனடியாக கிடைக்கவில்லை. அதன்பின் நான் அலைந்து திரிந்து ஆக்சிஜன் சிலிண்டரை ஏற்பாடு செய்தேன். பிரபலமான எனக்கே இந்த நிலை.. ஆக்சிஜன் சிலிண்டருக்காக மட்டுமல்ல, கொரோனா பாதிப்பால் இறந்தவர்களை எரிப்பதற்கும் புதைப்பதற்கும் கூட பதிந்து வைத்து மயானங்களில் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவலம் தான் நிலவுகிறது” என தனது வேதனையை வெளிப்படுத்தி உள்ளார்.