கவினுக்கு ஜோடியான பிரியங்கா மோகன் | தெலுங்கு படத்தில் விலைமாதுவாக நடிக்கும் கயாடு லோஹர் | பிரேமலு ஹீரோவின் புதிய படப்பிடிப்பை துவங்கி வைத்த பஹத் பாசில் | கூலி ரிலீஸ் தேதி கவுன்ட் டவுன் போஸ்டர் வெளியானது | “என் உயிருக்கு ஏதாவது ஆனால்...” : நடிகர் பாலாவின் 3-வது மனைவி மருத்துவமனையில் அனுமதி | அடுத்த ஆண்டு துவக்கத்தில் விக்ரமை இயக்கும் பிரேம்குமார் | நடிகை கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை பிறந்தது | 'குட் பேட் அக்லி' வெளியாகி மூன்று மாதங்கள் : இன்னும் வராத அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு | 3 நாட்கள் தியேட்டர் வளாகத்திற்குள் ‛நோ' விமர்சனம் : விஷால் வேண்டுகோள் | ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன் |
சினிமாவில் இப்போது இருக்கும் தணிக்கை முறையைப் போல அந்தக் காலம் தொட்டே இருந்திருந்தால் இதற்கு முன்பு வந்த சாதிய படங்கள் பல வராமலே போயிருக்கும். அப்படி பல சாதிப் பெருமைகளைச் சொல்லி வந்த படங்கள் நிறையவே உண்டு. ஆனால், இப்போது எந்த ஒரு சாதியைப் பற்றியும் வெளிப்படையாகவோ, ஏன் மறைமுகமாகவோ கூட சொல்ல முடியாது. வேண்டுமானால் 'குறியீடு' மூலமாகச் சொல்லிக் கொள்ளலாம்.
கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் சாதிய கருத்துக்களை முன் வைத்து சில படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் சில படங்கள் அந்த மக்களின் பிரச்சினைகளை, தேவைகளைப் பேசினாலும் சில காட்சிகள் மற்ற சாதிகள் மீதான வன்மத்தை குறியீடு மூலம் கோடிட்டும் காட்டுவது தேவையற்ற மோதல்களை உருவாக்கி விடுகிறது.
தற்போதைய தலைமுறையினர் முடிந்த அளவிற்கு சாதி பாகுபாடு பார்க்காமல் பழகி வருகிறார்கள். ஆனால், அவர்களிடத்தில் இந்த மாதிரியான படங்கள் தெரிந்தோ தெரியாமலோ ஒரு பாகுபாட்டை விதைத்து விடுகின்றன.
கடந்த வாரம் வெளிவந்த 'கர்ணன்' படம் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் ஒரு சாதிய மோதலை, கருத்து மோதலை, சிலரிடம் வன்மத்தை வெளிப்படுத்தும் அளவிற்கு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
படத்தை ஆதரித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் பலரும் பலவிதமான கருத்துக்களை முன் வைக்கிறார்கள். சாதி என்பது இரு பக்கமும் கூர்மையான கத்தி போலத்தான். எப்போது எந்தப் பக்கம் பதம் பார்க்கும் என்பதைச் சொல்ல முடியாது.
தங்களைப் பற்றி தங்கள் பெருமையைப் பற்றி ஒரு குறிப்பிட்ட சமூகம் பேசிக் கொள்ளும் போது யாரும் கவலைப்பட மாட்டார்கள். அதே சமயம் மற்ற சமூகத்தைப் பற்றி ஏதோ ஒன்று சொல்லப் போனாலும் அந்த மற்ற சமூகத்தினர் அவர்கள் பக்கத்து வாதத்தை எடுத்து வைக்க முன் வருவார்கள்.
ஒரு காலத்தில் நடந்து போன, மறக்க வேண்டிய வரலாற்று விஷயங்களை மீண்டும் ஞாபகப்படுத்திப் பார்ப்பது ஒரு பதிவா, அல்லது பாதிப்பா என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
சினிமா என்பது ஒரு சக்தி வாய்ந்த ஊடகம், அதை 'சாதி' என்ற குறுகிய வட்டத்திற்குள் அடைத்துவிடாதீர்கள் படைப்பாளிகளே....